பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, February 14, 2008

காதல் வாழ்க

1. ஒரு ஆணும் பெண்ணும் நெருக்கமாகப் பழகினால், உடனே அது காதலாக இருக்குமென்று எடுத்துக்கொள்ளக்கூடாதாம், ஏனென்று கேட்டால், “அவர்கள் நல்ல நண்பர்களாகவோ, அல்லது அலுவலகத் தோழர்களாகவோ இருக்கலாம் இல்லையா? அவர்கள் தமிழிலக்கியம் பற்றியோ அல்லது ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியோகூட பேசிக்கொண்டிருக்கலாம் இல்லையா? ரொமான்ஸ் பண்ணுகிறார்கள் என்று எப்படி தடாலடியாக முடிவுக்குவரலாம்?" என்கிறார்கள்.

2. பைக்கிலோ, சைக்கிளிலோ, ஒரு பெண்ணையும், ஆணையும் ஒரு சேரப் பார்த்தாலோ அல்லது அலுவலக இடைவேளைகளிலோ, டிஸ்கோத்தேவிலோ, பீஸா ஹட்டிலோ, கையேந்தி பவனிலோ, இன்ன பிற பொது/தனி இடங்களிலோ மணிக்கணக்கில் சிரித்துசிரித்துப் பேசி அரட்டை அடிக்கும் ஜோடிகளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் இருவரும் காதல் ஜோடிகள் என்று முடிவுக்கு வந்துவிடக்கூடாதாம்.

சரி, அப்படியானால், எப்போதுதான் காதலர்கள் காதலிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வீர்கள்? சினிமாவில் வருவதுபோல விதவிதமான உடைகள் அணிந்து பற்பல இடங்களில், செட்டிங்ஸ்போட்டு ஆடிப் பாடினால்தான் அது காதல் என்று ஒத்துக்கொள்வார்களோ?

எது எப்படியோ, இன்றைய நுகர்வுகலாச்சார யுகத்தில், காதலுக்கு உரிய மரியாதை தருவது சினிமா மட்டும்தான்; அது வியாபார நோக்கில் என்றாலும், பல கவிஞர்களை, பல அசிஸ்டெண்ட் டைரக்டர்களை, பல வசனகர்த்தாக்களை காதலைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது; காதலர்களுக்காகப் பரிந்து பேச வைக்கிறது. நிஜவாழ்க்கையில் என்னவோ, பெற்றோர்கள் எல்லாக்காலத்தையும் போலவே காதலை அங்கீகரிக்க மறுக்கின்றனர்; காதலை 'சீச்சீ' என்றே பார்க்கின்றனர்.என்னமோ தெய்வகுத்தம் வந்தாற்போல் குதிக்கின்றனர். போதாக்குறைக்கு இந்த சாதி மத பேதங்கள் வேறு. இந்த பேதங்களை உடைத்தெரியவே காதல் திருமணங்கள் பெருக வேண்டும்.

காதலர் தினத்திற்கு அங்கீகாரம் தரும் வியாபார சமூகம் உண்மையில் காதலுக்கும் அங்கீகாரம் கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால், ‘ரோஜா வியாபாரிகளாவது வாழட்டும்’ என்று சொல்வதுபோல, ‘வாலண்டைன்ஸ் டேய்’ வாழ்த்து அட்டைகளையும், சிறப்பு பொக்கேக்களையும் விற்கும் ஏழை விற்பனர்களும் முகவர்களுமாவது வாழட்டும் என்ற அளவில் காதலர் தினங்கள் நின்றுவிடும்.

எது எப்படியோ, இந்தக் காதலர் தினத்தில் காதலுக்கும், ஏழை வியாபாரிகளுக்கும் என் வாழ்த்துக்கள்! :)

Labels: ,

Wednesday, January 09, 2008

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



தென் தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டும், மண்ணின் மணம் கமழும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வருத்தத்திற்குரியது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் bull fightஐ விட இதிலொன்று அப்படி ஒரு கொடுமை எல்லாம் மஞ்சுவிரட்டு (chasing the bull) என்றும் அழைக்கப்படும் இந்த விளளயாட்டில் நடந்துவிடுவதில்லை. இந்த விளையாட்டில் பங்கு பெருபவர்களுக்கும், வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஆபத்து நிகழாமல் இருப்பதுதான் முக்கியம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த ஜல்லிக்கட்டு எப்போதும் போல் தொடர்ந்து நடைபெறுவதையே நானும் விரும்புகிறேன்.
ஊச்சப்பன் அவர்கள் எடுத்த இது போன்ற அருமையான புகைப்படங்கள் இங்கே நிறைய காணக்கிடைகின்றன.

Labels: ,

Monday, December 24, 2007

கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் - Merry Christmas


Flash Comments at WishAFriend.com">


''தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே - அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே''


முன்பெல்லாம் விவித் பாரதியில் காலை எட்டேகால் முதல் எட்டரை வரை இந்து, முஸ்லிம், க்ரிஸ்டின் என மூன்று சமயத்தாரையும் திருப்திப்படுத்தும் வகையில் பக்திப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் அவசரத்தில் எதேச்சையாக காதில் விழுந்தும், அடிக்கடிக்கேட்க நேர்ந்ததாலும் அப்படியே மனதில் தங்கிய வரிகள்தான் அது - தேனினிமையிலும் ஏசுவின் நாமம் பாடல்.. இந்தப் பாடலை யார் எழுதினார்கள் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஜிக்கி அம்மாவின் இனிமையான குரலில் இந்தப் பாடலைக் கேட்டதாக நினைவு.

உங்கள் எல்லோருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

Labels:

Wednesday, November 07, 2007

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்













தேடித்தேடிப் பார்த்தேன்...ஒரியா மட்டும்... கிடைக்கலீங்க!

அதுசரி... இதுல உள்ள மொழிகள்ளாம் என்னென்னன்னு, வரிசைப்படி சொல்லுங்க பார்ப்போம்.

Labels: