பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Wednesday, January 09, 2008

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



தென் தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டும், மண்ணின் மணம் கமழும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வருத்தத்திற்குரியது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் bull fightஐ விட இதிலொன்று அப்படி ஒரு கொடுமை எல்லாம் மஞ்சுவிரட்டு (chasing the bull) என்றும் அழைக்கப்படும் இந்த விளளயாட்டில் நடந்துவிடுவதில்லை. இந்த விளையாட்டில் பங்கு பெருபவர்களுக்கும், வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஆபத்து நிகழாமல் இருப்பதுதான் முக்கியம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த ஜல்லிக்கட்டு எப்போதும் போல் தொடர்ந்து நடைபெறுவதையே நானும் விரும்புகிறேன்.
ஊச்சப்பன் அவர்கள் எடுத்த இது போன்ற அருமையான புகைப்படங்கள் இங்கே நிறைய காணக்கிடைகின்றன.

Labels: ,

Sunday, November 04, 2007

IT/ITES நிறுவனங்களில் தொழிற்சங்கம்


'ஐடி நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க தடையில்லை' என்ற செய்தித் தலைப்பைப் பார்த்த மாத்திரமே எனக்கு, மென்பொருள் துறையிலும் BPO/Call center துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தொழிற்சங்கம் தேவையா இல்லையா என்று கடந்த வருடம் நாடு முழுவதும் விவாதம் நடைபெற்ற (பெற்றுக் கொண்டிருக்கிறது?) விஷயம் நியாபகத்திற்கு வந்தது. இந்த விவாதத்தை, தேசிய அளவில் இயங்கிக்கொண்டிருக்கும் மத்தியத் தொழிற்சங்கத்தினர், குறிப்பாக இடதுசாரி தொழிற்சங்கத்தினர் (CITU மற்றும் AITUC) மட்டும்தான் பெரிதாக எடுத்துக்கொண்டார்களே தவிர, மேலே குறிப்பிட்ட இந்தத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், கடந்தவாரம், சென்னையில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு. ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ், சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, 'தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைக்க எவ்விதத் தடையும் இல்லை' என்று தெரிவித்தார். மேலும் அவர், தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கென்று தனியாகத் தொழிலாளர் சட்டத்தை உருவாக்க முடியாது என்றும், ஏற்கனவே உள்ள தொழிலாளர் நலச்சட்டமே அவர்களுக்குப் பொருந்தும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக 3 மற்றும் 4-ஆவது பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்கள், நலச்சட்டத்துக்குள் வருவார்கள் என்று கூறிய அவர், அதிகாரிகள் இந்தச் சட்டத்திற்குள் வரமாட்டார்கள் என்றும், மென்பொருள் துறை ஊழியர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கத்தை அமைத்துக்கொள்ள அவ்வித தடையும் இல்லல என்றும் ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார். இப்போது, மத்திய மந்திரி வேறு கோடி காட்டிவிட்டார். இனி IT/ITES துறை வளாகங்களிலும் கேட்குமா.. 'தொழிலாளர் ஒற்றுமை, தொழிற்சங்க ஒற்றுமை' கோஷங்கள்? வேலை நிறுத்தம், ஒருமணி/இரண்டுமணி நேர வெளிநடப்பு, கையெழுத்து இயக்கம், work-to-rule, go-slow attitude, ஒத்துழையாமை, மதிய இடைவேளை ஆர்ப்பாட்டம், pen-down (அல்லது mouse/keyboard down) போன்ற போராட்டங்கள்... IT/ITES துறைகளிலும் அரங்கேறுமா? முதலில் ஒரு தொழிற்சங்கம் தோன்றி, பின்னர் அது உடைந்தும், அதிலிருந்து இன்னொன்று உடைந்தும், காலப்போக்கில் படிப்படியாக பல தொழிற்சங்கள் உருவாகி, ஏற்கனவே தொழிற்சங்கரீதியில் பிளவுபட்ட தொழிலாளர்களை மேலும் பிளக்க சாதி, மத, ப்ராந்திய அடிப்படையிலான சங்கங்களும் தோன்றி, கடைசியில், எல்லாமே அரசியற்கட்சிகளின் கைப்பாவைகளாய்த் தேய்ந்து, ஊழியர்களின் உண்மையான நலனெல்லாம் கேள்விக்குறியாகுமோ? இன்று, தொலைதொடர்புத் துறையில் நடப்பது போன்று, caught between devil and the deep sea என்பது மாதிரி, பாரபட்சமாகச் செயல்படும் தொழிற்சங்கத்துக்கும் தாந்தோன்றித்தனமாக செயல்படும் நிர்வாகத்திற்கும் இடையில் சிக்கித்தவிக்கும் நிலை IT/ITES துறை அப்பாவி ஊழியருக்கு ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

எது எப்படியோ, இன்று BPO/call centerகள் data security, identity protection விவகாரங்களில் மேலைநாட்டு கெடுபடிகளுக்குப் பயந்து தங்களது அலுவலக அணுகுமுறையை மாற்றி அமைத்ததுபோல, தொழிலாளர்/ஊழியர் நலனிலும் பாதுகாப்பிலும் போதுமான அக்கறையுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு, பெங்களூரில் உள்ள Call centerல் பணிபுரிந்த இளம் பெண்ணொருத்தி வன்கொடுமைக்கு ஆளாகிப் பலியாகியுள்ள விஷயம், பெங்களூரையே பரபரப்பாக்கியது. நேற்று இதே போன்றொரு கொடுமையான சம்பவம் புனேவில் நடந்தேறியுள்ளது

இந்நிலையே தொடர்ந்தால், நிச்சயம் இத்துறையில் தொழிற்சங்கம்(கள்) தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிடும். சில இடங்களில், இவைகளில் பணிபுரியும், அதிகாரிகளேகூட தொழிற்சங்கம் என்று இல்லாவிட்டாலும் ஊழியர் சார்பாக 'ஒரு pressure group' ஒன்று வந்தால் தேவலை என்று கருதத் துவங்கிவிடுவார்கள்.

News:

Pune Tragedy

Labels: ,

Saturday, July 28, 2007

ஹாரி பாட்டர் - சச்சின் டெண்டுல்கர்





நேற்று மாலைதான், தோஹா சிடி சென்டர் திரையரங்கில் Harry Porter and the Order of The Phoenix பார்த்தேனா, இன்று காலை இணையத்தில், டெண்டுல்கரின் ஆட்டோகிராபிற்காக வரிசையில் நின்ற ஹாரி பாட்டர் (அதான், டேனியல் ரட்க்ளிஃப்) பற்றிய செய்தியைக் கண்டேன்.


உலகத்திற்கு அவர் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகராக இருக்கலாம்; லட்சோபலட்சம் ரசிகர்கள் இருக்கலாம் அவருக்கு; ஆனால், நமது சச்சின் டெண்டுல்கர் முன்பு அவரும் ஒரு ரசிகர்தான்.... right?! (மேலே நீங்கள் காண்பது, ட்ரெண்ட் ப்ரிட்ஜில் டெஸ்டில் நேற்றய பொழுது - 44ஆவது அரைசதம் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 11,000 ஓட்டங்கள் எடுத்த சாதனை வீரர் சச்சின் - ரசிகர்களுக்காக ஒரு படம்)

Labels:

Monday, July 16, 2007

இணையத்தில் இந்திய மொழிகள்

நேற்று, இணையப் பயன்பாட்டில் ஹிந்தி மொழியினை பலமாக்க அறைகூவல் விடுத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். பலகாலமாகவே, மன்மோகன் சிங், சோனியா, வாஜ்பாய், வி.பி.சிங், முலாயம் உட்பட பல காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் தலைவர்கள், இணணயத்தில் ஹிந்தி மொழியினை அதிகரிப்பதற்கான அரசாங்க உதவி பற்றிப் பேசினாலும், நடைமுறையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை என்ற விமர்சனம் ஹிந்தி மாநாடுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

நியூயார்க்கில் நடைபெற்ற எட்டாவது உலக ஹிந்தி மாநாட்டிற்காக அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் அவ்வாறு கூறியிருந்தார். யதார்த்த நிலை உணர்ந்துதான் சொன்னாரா அல்லது மாநாட்டுச் சூழலில் ஒப்புக்காகச் சொன்னாரா என்பது ஒரு புறமிருந்தாலும், பொதுவாகவே இணையத்தில் ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளதாகவே தோன்றுகிறது.

அண்மைக்காலத்தில், அரபு மொழி இணையத்தில் முன்னேறி வருவதோடு ஒப்பிட்டால், இந்திய மொழிகள் காணும் முன்னேற்றம் மெச்சத்தகுந்த அளவில் இல்லையென்றே தகவல் தொடர்புச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இணையத்தில் எந்த அளவிற்கு இந்திய மொழிகள் கோலோச்சுகின்றன என்பதை கீழ்க்காணும் அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் ஹிந்தி இருக்குமிடம் தெரியவில்லை. உலகிலேயெ இரண்டாவது மக்கட்தொகை கொண்ட நம் நாட்டில் அதிகம் பேர் பேசும் மொழியும் அதிகம் பேர் புரிந்து கொள்ளும் மொழியுமான ஹிந்தி இந்த லிஸ்டில் லேது.

பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இணையத்தில் ஆங்கிலம் மாத்திரமே சாத்தியமென்று இன்னமும் எண்ணிக்கொண்டிருக்கிறார்களோவென்றே தோன்றுகிறது. ஆங்கில வலைத்தளங்களையும், அங்கில தேடுதல் கருவியையும் மட்டுமே நம்புகின்றனரோ? சரி, எத்தனை பேருடைய கணினிகளில்தான் இந்திய மொழிகளின் எழுத்துரு இருக்கிறது? சென்னை, திருச்சி, விஜயவாடாவில் நான் பார்த்த முக்கால்வாசி ப்ரவுசிங் செண்டரில், சில தமிழ் வலைத்தளங்களை பார்வையிடமுடியாதபடி எழுத்துருப் பிரச்சினை நிலவுகிறது. நான் பணிபுரியும் இடத்திலேயே, கணினியில் தமிழில் டைப் செய்தால், கிராமவாசிகள் ஏதோ ஹெலிகாப்டரை வேடிக்கை பார்ப்பதைப்போல அலுவலகத்தில் உடன்பணிபுரியும் வெள்ளைக்காலர் பணியாளர்கள் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் ஒருபக்கம் இருக்கட்டும், இந்த பிரவுசிங் செண்டர் வைத்திருக்கும் தனியாரும் தாங்களால் இயன்றவற்றைச் செய்யவேண்டாமா? அவ்வாறு உருப்படியாக ஏதாவது செய்தால், சொந்தமாகக் கணினி வசதியில்லாத என்போன்ற பலர் அவ்வப்போது ஆங்கிலத்தில் கிறுக்க வேண்டிய அவசியமும் இருக்காது; ஆங்காங்கே சில சமயங்களில் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட நேரும்போது யாரும் இனி சாக்குகள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதும் இருக்காது :)

Labels: