பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Tuesday, November 27, 2007

செம்மீன் - மானஸ மைனே வரு...



செம்மீன் படப் பாடல் ‘கடலினக்கரப் போணோரே..’ பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் கூட ‘ஹிட்’ ஆன ஒரு பிறமொழிப்பாடல். செம்மீன் படத்தின் பாடல்களை நான் பல சமயங்களிலும் கேட்க நேர்ந்திருந்தாலும், படத்தைக் காணும் வாய்ப்பு சமீபத்தில்தான் கிடைத்தது.

தகழி சிவசங்கரன் பிள்ளை என்னும் மகத்தான இலக்கிய புருஷன் படைத்த நாவல்தான் செம்மீன் படத்தின் கதை, திரைக்கதை, ஜீவன் எல்லாம். தகழி, செம்மீன் நாவலை இருவதே நாட்களில் எழுதிமுடித்தாராம். பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல், தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளார்.

மலையாள சினிமாவிற்கு மணிமகுடம் அளித்த இந்த செம்மீன் பட DVDயை திரும்பத் திரும்பப் போட்டுப்பார்த்தேன்... ஏன், படம் load ஆகவில்லையா, கதை புரியவில்லையா என்று கேட்காதீர்கள். ஓரளவு புரிந்த மலையாளமும், ஆங்கில subtitlesம் விளக்காத சில உண்மைகளை அறிந்து தெளிவு பெறவேண்டி, செம்மீன் படத்தை நினைவுகூறும் மலையாள அன்பர்கள் சிலரிடமும் கேட்டுப்பார்த்தேன்... என் மனதை வாட்டியெடுத்த அந்தக் கேள்வி இதுதான். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி முடிவில் ஒரு மீனைக் காண்பிக்கிறார்களே.. எந்த வகையில் கதை, ‘செம்மீன்’ என்ற டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணுகிறது என்ற எனது கேள்வி உங்களுக்கெல்லாம் சில்லியாகப் பட்டாலும், என் இந்தக் கேள்விக்கு இங்கு இருக்கும் என் மலையாளி நண்பர்கள் ஒருவரிடமும் பதிலில்லாததாலேயே, இதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

‘ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம்’ என்று நம் வாலி சொன்ன வார்த்தைகளின் நிஜத்தை படகோட்டி காட்டியதோ இல்லையோ, செம்மீன் படம் கடலோர மீனவர் சமூக வாழ்க்கையைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது;

பெற்றோர் கருத்தம்மாவின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் - காதலன் பரீக்குட்டி ஒரு முஸ்லிம் என்பதாலும், கருத்தம்மாவின் தந்தையின் பணத்தாசையினாலும்! பெற்றோரின் வற்புறுத்தலில் தன் காதலைத் துறக்கிறாள் கருத்தம்மா. வீட்டார் பார்த்துவைத்த பழனியைக் கரம் சேர்த்து இல்வாழ்கையில் புகுகிறாள். பரீக்குட்டி அவள் பிரிவால் வாடி வதங்குகிறான் (இன்றைய ‘காதல்’ படம் வரை ஆண்கள் நிலைதான் பரிதாபத்திற்குரியது...). பழைய காதல் பற்றிய வதந்திகளுக்கு இடையிலும் கருத்தம்மா-பழனி வாழ்க்கை ஓஹோ என்றில்லையென்றாலும் சுமுகமாகவே செல்கிறது. இதற்கிடையில் கணவன் நடுக்கடலில், மீன் பிடிக்கப்போயிருக்கும் ஒரு இரவில், கருத்தம்மாவும், பரீக்குட்டியும் சந்தர்ப்பவசத்தால் சந்திக்க நேர, அந்தத் தருணத்தில் மீண்டும் மலர்ந்த காதல் அவர்களை ஒன்றாக்குகிறது, அதே காட்சியின் தொடர்ச்சியாக, தன்னந்தனியனாய் ஒரு சுறா மீனைப்பிடிக்கப் போன கணவன் ஆழிச்சுழலில் சிக்குவதையும் காட்டுகிறார்கள். அடுத்துவந்த கடைசி காட்சியில், மரணத்தில் இணைந்த காதல் ஜோடிகளாக கருத்தம்மாவும், பரீக்குட்டியும் கடற்கரையோரம் கிடக்க... அவர்களுக்கு சற்றே தொலைவில் ஒரு சுறாமீனும் கரையோரம் ஒதுங்கிக் கிடக்கிறதாகக் காட்சி முடிகிறது.

தகழி சிவசங்கரன் பிள்ளையின் இக்காவியத்திற்கு ராமு காரியாத் திரைவடிவம் கொடுத்திருந்தாலும், தேசிய அளவில் செம்மீன் படம் மூலம் மலையாள சினிமாவை பேசவைத்தக் காரண கர்த்தாக்களாக இருந்த மூன்று மலையாளிகள் அல்லாதாரின் பங்கினையும் குறிப்பிட்டாக வேண்டும் - மாக்கஸ் பார்ட்லேவின் ஒளிப்பதிவும், ஹ்ருஷிகேஷ் முகர்ஜியின் ஒலிப்பதிவும் (எடிட்டிங்) மற்றும் செம்மீன் திரைக்காவியத்தின் ஜீவனோடு ஐக்கியமான சலீல் சவுத்ரியின் இசையும்.


மற்றுமொரு மலையாளி அல்லாதாரும் செம்மீன் திரைக்காவியத்தின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார்... அவர்தான் மன்னா டே. அவர் பாடிய ‘மானஸ மைனி வரு’ பாடல், கேரளத்தில் மட்டுமல்லாமல், தென்னிந்தியாவெங்கிலும் மற்றும் இலங்கைத் தமிழர் மத்தியிலும் அதிகம் ரசித்துக் கேட்கப்பட்ட பாடலாக விளங்கியது. உணர்ச்சிகரமான அந்தப் பாடலில் அதிகம் ஈடுபட்டுப் பாடிய மன்னா டே அவர்களினால் எப்படி ஒரு மலையாளப் பாடலை அதுவும் அதன் ஜீவன் குலையாமல் எப்படிப் பாடமுடிந்தது என்று ஆச்சரியத்தோடு பார்த்தனர். ஆரம்பத்தில், ரெக்கார்ட்டிங் முடிந்துவிட்டு, வீட்டில் செம்மீன் பாடலைப் பாடிய போது, மன்னா டேயின் மகள் கேட்டாளாம் அது என்ன மொழிப்பாடல் என்று. மன்னா டே, அப்பாடல் மலையாள மொழி என்று சொன்னதை நம்பாத அவர் மகள், மீண்டும் அப்பாடலை அவள் அம்மா முன்பாகப் பாடி உறுதிசெய்தபின்னரே நம்பினாளாம். நிறையபேருக்குத் தெரியாத ஒரு விஷயமும் உண்டு.. மன்னா டேயின் துணைவியார் சுலோசனா ஒரு மலையாளி என்பது.

மன்னா டேயின் ரசிகர் எண்ணிக்கை என்னதான் கூடினாலும், அவர் ஏன் முகேஷ், முகமது ரஃபி, கிஷோர் குமார் அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்பது எனக்கு விளங்காததாகவே இருக்கிறது. இரவு நேரம், கடற்கரையோர மணற்பரப்பு, காதலியின் பிரிவில் வாடும் காதலன் பரிக்குட்டியாக சோகம் ததும்பும் முகத்துடன் மது பாடுவதுபோல் அமைந்த வயலார் ராம வர்மாவின் வரிகளில் வந்த இந்தப் பாடலும், காட்சியும் காலத்தால் அழிக்க முடியாத திரைப்படைப்புகளில் ஒன்று.


மானஸ மைனே வரு
மதுரம் நுள்ளித் தரு
நின் அரும பூவாதிகளில் தேடுவதாரே.. ஆரே (மானஸ மைனே...)

நிலாவிண்டெ நாட்டில் நிஷாகந்திப் பூத்தல்லோ
களிக் கூட்டுகாரனெ மறன்னு போயோ (மானஸ மைனே...)

கடலிலே ஓலவும் கரலிலே மோஹவும்
அடங்குகில்லோமனே அடங்குகில்லா (மானஸ மைனே...)


லதா மங்கேஷ்கருடன் சோரி சோரி படத்தில் பாடிய ‘ஏ ராத் பீகி பீகி...’ஆஜா சனம்...’ பாடல்களும் மற்றும் ஸ்ரீ420 படத்தில் ‘ப்யார் ஹுவா இக்ரார் ஹுவா...’ பாடலும் மன்னா டே அவர்கள் பாடிய என் உளங்கவர்ந்த மற்ற பாடல்கள்.

Links:

செம்மீன் படம் பற்றிய விக்கிப்பீடியா தகவல்
மன்னா டே பற்றிய விக்கிபீடியா தகவல்
மன்னா டே அவர்களின் வலைத்தளம்
செம்மீன் படம், கதை பற்றி வலைப்பூ ஒன்றில்

Labels: ,

Wednesday, November 07, 2007

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்













தேடித்தேடிப் பார்த்தேன்...ஒரியா மட்டும்... கிடைக்கலீங்க!

அதுசரி... இதுல உள்ள மொழிகள்ளாம் என்னென்னன்னு, வரிசைப்படி சொல்லுங்க பார்ப்போம்.

Labels:

Sunday, November 04, 2007

IT/ITES நிறுவனங்களில் தொழிற்சங்கம்


'ஐடி நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க தடையில்லை' என்ற செய்தித் தலைப்பைப் பார்த்த மாத்திரமே எனக்கு, மென்பொருள் துறையிலும் BPO/Call center துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தொழிற்சங்கம் தேவையா இல்லையா என்று கடந்த வருடம் நாடு முழுவதும் விவாதம் நடைபெற்ற (பெற்றுக் கொண்டிருக்கிறது?) விஷயம் நியாபகத்திற்கு வந்தது. இந்த விவாதத்தை, தேசிய அளவில் இயங்கிக்கொண்டிருக்கும் மத்தியத் தொழிற்சங்கத்தினர், குறிப்பாக இடதுசாரி தொழிற்சங்கத்தினர் (CITU மற்றும் AITUC) மட்டும்தான் பெரிதாக எடுத்துக்கொண்டார்களே தவிர, மேலே குறிப்பிட்ட இந்தத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், கடந்தவாரம், சென்னையில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு. ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ், சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, 'தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைக்க எவ்விதத் தடையும் இல்லை' என்று தெரிவித்தார். மேலும் அவர், தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கென்று தனியாகத் தொழிலாளர் சட்டத்தை உருவாக்க முடியாது என்றும், ஏற்கனவே உள்ள தொழிலாளர் நலச்சட்டமே அவர்களுக்குப் பொருந்தும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக 3 மற்றும் 4-ஆவது பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்கள், நலச்சட்டத்துக்குள் வருவார்கள் என்று கூறிய அவர், அதிகாரிகள் இந்தச் சட்டத்திற்குள் வரமாட்டார்கள் என்றும், மென்பொருள் துறை ஊழியர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கத்தை அமைத்துக்கொள்ள அவ்வித தடையும் இல்லல என்றும் ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார். இப்போது, மத்திய மந்திரி வேறு கோடி காட்டிவிட்டார். இனி IT/ITES துறை வளாகங்களிலும் கேட்குமா.. 'தொழிலாளர் ஒற்றுமை, தொழிற்சங்க ஒற்றுமை' கோஷங்கள்? வேலை நிறுத்தம், ஒருமணி/இரண்டுமணி நேர வெளிநடப்பு, கையெழுத்து இயக்கம், work-to-rule, go-slow attitude, ஒத்துழையாமை, மதிய இடைவேளை ஆர்ப்பாட்டம், pen-down (அல்லது mouse/keyboard down) போன்ற போராட்டங்கள்... IT/ITES துறைகளிலும் அரங்கேறுமா? முதலில் ஒரு தொழிற்சங்கம் தோன்றி, பின்னர் அது உடைந்தும், அதிலிருந்து இன்னொன்று உடைந்தும், காலப்போக்கில் படிப்படியாக பல தொழிற்சங்கள் உருவாகி, ஏற்கனவே தொழிற்சங்கரீதியில் பிளவுபட்ட தொழிலாளர்களை மேலும் பிளக்க சாதி, மத, ப்ராந்திய அடிப்படையிலான சங்கங்களும் தோன்றி, கடைசியில், எல்லாமே அரசியற்கட்சிகளின் கைப்பாவைகளாய்த் தேய்ந்து, ஊழியர்களின் உண்மையான நலனெல்லாம் கேள்விக்குறியாகுமோ? இன்று, தொலைதொடர்புத் துறையில் நடப்பது போன்று, caught between devil and the deep sea என்பது மாதிரி, பாரபட்சமாகச் செயல்படும் தொழிற்சங்கத்துக்கும் தாந்தோன்றித்தனமாக செயல்படும் நிர்வாகத்திற்கும் இடையில் சிக்கித்தவிக்கும் நிலை IT/ITES துறை அப்பாவி ஊழியருக்கு ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

எது எப்படியோ, இன்று BPO/call centerகள் data security, identity protection விவகாரங்களில் மேலைநாட்டு கெடுபடிகளுக்குப் பயந்து தங்களது அலுவலக அணுகுமுறையை மாற்றி அமைத்ததுபோல, தொழிலாளர்/ஊழியர் நலனிலும் பாதுகாப்பிலும் போதுமான அக்கறையுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு, பெங்களூரில் உள்ள Call centerல் பணிபுரிந்த இளம் பெண்ணொருத்தி வன்கொடுமைக்கு ஆளாகிப் பலியாகியுள்ள விஷயம், பெங்களூரையே பரபரப்பாக்கியது. நேற்று இதே போன்றொரு கொடுமையான சம்பவம் புனேவில் நடந்தேறியுள்ளது

இந்நிலையே தொடர்ந்தால், நிச்சயம் இத்துறையில் தொழிற்சங்கம்(கள்) தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிடும். சில இடங்களில், இவைகளில் பணிபுரியும், அதிகாரிகளேகூட தொழிற்சங்கம் என்று இல்லாவிட்டாலும் ஊழியர் சார்பாக 'ஒரு pressure group' ஒன்று வந்தால் தேவலை என்று கருதத் துவங்கிவிடுவார்கள்.

News:

Pune Tragedy

Labels: ,

Saturday, November 03, 2007

சு.ப. தமிழ்ச்செல்வன்

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? - மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்...



Photos: