பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Sunday, April 29, 2007

வாணி ஜெயராம் - 2 பாடல்கள்





கானக்குயில் வாணிஜெயராம் அவர்கள், வசீகரமானக் குரல் கொண்டவர் என்றாலும், சித்ரா, S. ஜானகி, P.சுசீலா அளவிற்கு அவர் பிரபலமாகாததற்குக் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் பாடிய பல பாடல்கள் அவரது இனிமையான குரலின் காரணமாகவே ஹிட்டானதோடு மட்டுமல்லாமல், நெஞ்சில் நீங்கா நிற்கும் பாடல்களாகவும் பல ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளது என்னவோ உண்மை.


1979ல் இளையராஜாவின் இன்னிசையில் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் இடம்பெறும் 'என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...' பாடலும் 'நானே நானா யாரோதானா...' பாடலிலும் பல பரிமாணங்களைக் காட்டியிருப்பார். 'நானே நானா...' பாடலில் நாயகி, melancholic moodல் தன் உள்ளத்து உணர்சிகளை ஒருவித மயக்கத்தோடு வெளிப்படுத்துவதுபோல் அமைந்துள்ள சூழலில், வாணி ஜெயராம் வழக்கமாகத் தன் குரலில் தொனிக்கும் அந்த இயல்பான assertivenessஸையும் மீறி, மிக நேர்த்தியாகவும், கவனமாகவும் இதமாகவும் துயரத்தின் விளிம்பு நிலையைக் கொண்டுவந்திருப்பார். சோகம் தவழும் இந்தப் பாடலின் இசை, சென்னைத் தொலைக்காட்சியின் 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சிக்கான ட்யூனாகவும் வெகுகாலம் விளங்கியது என்பது இளையராஜாவிற்குப் பெறுமை சேர்க்கிறது. பாடலைக் கேட்க சொடுக்கவும் இங்கே

லதா என்றாலே MGR-ஓடு பாடிய டூயட் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், அவர் தனக்கு யதார்த்தமாகவும் நடிக்க வரும் என்பதை வட்டத்துக்குள் சதுரம் (இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்...) மற்றும் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படங்களில் நிரூபித்திருக்கிறார். இதுவும் இன்னொரு ஸ்ரீதர் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
***

1978ல் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வரும் ஒரு பாடற்காட்சி (என்னடி மீனாட்சி...) நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில்தான் படமாக்கப் பட்டது. கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா முதலியோர் வந்திருந்தார்கள். யாரும் என் கண்ணில் படவில்லை என்றாலும் நான் வேடிக்கைப் பார்த்த முதல் சினிமா ஷூட்டிங் அதுதான் எனலாம். 'சம்பவ இடத்தில்' திரும்பத் திரும்ப அந்தப் பாடல் ஒலிபரப்பப் பட்டதனால், பள்ளிப் பருவத்தில், அந்தப் பாடலையே அதிகம் விரும்பிக் கேட்க நேர்ந்தது; காலையில் விவித் பாரதியின் 'உங்கள் விருப்பம்' நிகழ்ச்சியில் கேட்க நேரிட்டால் அன்றைய பொழுது மிக்க மகிழ்ச்சியாயிருக்கும்; பாடலின் முதல் சில வரிகளை எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருந்த காலம் அது.

படம் வெளியான பின்னர் எப்படியும் பார்த்தே ஆகவேண்டும் என்ற என் ஆசை என்னமோ நீண்ட நாட்களுக்குப் பின்னர் சன் டிவி மூலமாகத்தான் நிறைவேறியது. இந்தப் படத்தில், இளையாரஜாவின் இசையில் வாலியின் பாடல் ஒன்றினை வாணி ஜெயராம் மிக அழகாகப் பாடியிருப்பார்.

பாடலைக் கேட்க சொடுக்குங்கள் இங்கே



ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ராஜேஷ் கன்னாவும் ஷத்ருகன் சின்ஹாவும் நடித்த படம். தூர்தர்ஷனில் பார்த்த நியாபகம். ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா கதாபாத்திரங்களில் யார் யார் நடித்தார்கள் என்று நினைவிலில்லை.
***

Labels:

Friday, April 27, 2007

நரைகூடி கிழப்பருவமெய்திய பின்னர் (தமாஷ் பதிவுதான்)

இதுவும் இமெயிலில் வந்த ஒரு cut and paste விஷயம்தான். இருந்தாலும் ஜோரா இருக்குல? :)

கபில்தேவ்
ஜெயசூர்யா

முகமது கைஃப்

சச்சின் டெண்டுல்கர்

அனில் கும்ப்ளே


ஹ்ரிதிக் ரோஷன்

ஷாருக் கான்

ஷோயப் அக்தர்

ஸ்டீஃபன் வா

ஆனா நம்ப ரெஜினி மட்டும்...












Sunday, April 15, 2007

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்...



ராமு படத்தில் வரும் இந்தப்பாடல் சினிமாவில் அரிதாகக் காணக் கிடைக்கும் பக்திப்பாடல் வகையில் வந்தது. ஜெமினி கணேசன், K.R.விஜயா நடித்து 1966ல் வெளிவந்த ராமு படத்தில் வரும் எல்லா பாடல்களுமே மனதிற்கினைமையான பாடல்கள்தான். எனினும், உண்மையான மனதிற்கினிமை என்பது ஆண்டவன் சந்நிதானம்தான் என்று நம்புவோர்க்கு கவிஞரசர் கண்ணதாசனின் இந்தப்பாடல் நிச்சயாமாக நிறைவைத்தரும் பாடலாக விளங்குகிறது. மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதனின் இதமான இசையயும், சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலும், பக்தர்களோடு பக்தராக நின்று மனமுருகப் பாடும் பெரியவராக வரும் நாகையாவின் பாத்திரப்படைப்பும் பக்தி ரசம் சொட்டும் இந்தப் பாடற்காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது.






சீர்காழி. கோவிந்தராஜன், T.M.சௌந்தரராஜன் குழுவினர் குரலில் பாடலைக் கேட்க இங்கே click செய்யுங்கள்... "கண்ணன் வந்தான் அங்கெ கண்ணன் வந்தான்..."

Labels:

Friday, April 13, 2007

தமிழுக்கும் அமுதென்று பேர்...




தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)

- பாவேந்தர் பாரதிதாசனார்.

நன்றி: www.tamilnation.org

Tuesday, April 10, 2007

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

ஜெமினி கணேசன், சாவித்திரி, ஜமுனா, S.V.ரங்கா ராவ் நடித்து 1955ல் வெளிவந்த மிஸ்ஸியம்மா என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் நான் அதிகம் ரசித்து லயித்த பாடல்களில் ஒன்று. A.M.ராஜாவும், P.சுசீலாவும் பாடிய தஞ்சை ராமையா தாஸ் பாடலுக்குத் தேனினும் இனிமையான இசை அமைத்தவர் S.ராஜேஸ்வர ராவ். தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் - 'வாராயோ வெண்ணிலாவே...', 'பழகத்தெரிய வேணும்...' தெலுங்கில் NTR நடித்த பாத்திரத்தில், தமிழிலும் பின்னர் ஹிந்தியிலும் (மிஸ். மேரி- 1957ல்) கூட ஜெமினி கணேசனே நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஜமுனா... அரசியல் கலப்பில்லா புன்சிரிப்பு!










'மிஸ்ஸியமா'வில் ஜெமினி கணேசன் - சாவித்திரி (1955)
to listen the song click here - Brindhaavanaum Nandhakumaaranum...
ராஜா: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
P. சுசீலா: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
ராஜா: ஏனோ ராதா இந்த பொறாமை, யார்தான் அழகால் மயங்காதவரோ
சுசீலா: ஏனோ ராதா இந்த பொறாமை, யார்தான் அழகால் மயங்காதவரோ
இருவரும்: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ

ராஜா: புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
சுசீலா: புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
ராஜா: ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா
சுசீலா: ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா
இருவரும்: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ

ராஜா: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா
சுசீலா: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா
ராஜா: ஏனோ ராதா இந்த பொறாமை, யார்தான் அழகால் மயங்காதவரோ
இருவரும்: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
* * *

Labels:

Saturday, April 07, 2007

சின்னத்திரை பக்கம்

மாலை நேரம் வந்தால்...சன் தொலைக்காட்சியின்
பரபரப்பான செய்திகளூம், அரசியல் உள்நோக்குடனான செய்தித்தொகுப்புகளும், சீரழிக்கும் சீரியல்களும், கலாய்கும் காமெடிகளும், கோடம்பாக்க கச்சேரிகளுமே நம்மை ஆக்கிரமித்து விடுமோவென்றெண்ணி ச‎ன்னிலிருந்து விலகி, அப்படி என்னதான் இருக்கிறது என்று சற்றே தூர்தர்ஷன் பொதிகை சேனல் பக்கம் போனால், அதில் யாராவது ஒரு பாகவதர் சகிக்க முடியாதபடியாக கர்னாடக சங்கீதக் கச்சேரி பண்ணிக்கொண்டிருப்பார் (அவர் வீட்டிலேயே யாரும் அவர் பாடுவதைக் கேட்கமாட்டார்கள்!). தெலுங்குக் கீர்த்தனைகளுக்கு நான் எதிரி அல்ல; நல்ல வேளை, தமிழ் இவரிடமிருந்து பிழைத்துக்கொண்டது என்றுதான் நான் எண்ணிக்கொள்வேன்.

இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு Fox Sports பக்கம் போகவே பிடிக்கவில்லை. Tensportsல் எப்போதோ இந்தியா வெற்றி பெற்ற சில 'க்ளாசிக்' காட்சிகளைத் (ஷார்ஜாவில் ஜிம்பாப்வேயை விளாசித்தளும் டெண்டுல்கர்) திரும்பத்திரும்பக் காண்பித்து `எப்படி இருந்த நாம்...' என்று அழவைக்கிறார்கள். அரதப்பழசான ashes test போட்டிகளைப் பார்க்கும் யோது, அட இந்தக் கிரிக்கெட்டை அல்லவா நாம் காதலித்தோம் என்று பால்யகால நினைவுகளை சுண்டியிழுக்கச் செய்கிறது. இயன் போத்தம், டேவிட் கோவர், பாப் வில்லிஸ், டென்னிஸ் லில்லி, க்ரெக் சாப்பல், ராட்னி மார்ஷ் போன்ற ஆட்டக்காரர்களுக்கு தேசம்கடந்த ரசிகர்கள் உண்டு...1979 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்திற்கெதிரான விவியன் ரிச்சர்ட்ஸினது ஆட்டத்திற்கு இணையான ஆட்டத்தை இன்றுவரை நான் கண்டதில்லை. மைக் ஹென்ரிக் என்ற வேகப்பந்துவீச்சாளரின் inswinging yorkerஐ, வெகுலாவகமாகத் திரும்பி, full tossஆக மாற்றி, deep square legற்கு மேல தூக்கியடித்த அந்த சிக்ஸர் காட்சி பசுமரத்தாணிபோல் பல ரசிகர்களது மனதில் பதிந்தது உண்மை.

இன்று ப்ரெய்ன் லாராவின் copy book shotகளை நாம் ரசிக்கிறோம், அவை நமக்கெதிராக விளையாடப்படாதவரை. ஒரு ஆஸ்திரேலிய ரசிகர் குறிப்பிட்டார்...'எழில்மிகு இடதுகை ஆட்டக்காரர் டேவிட் கோவர், ஆஃப் சைடில் எழும் பந்தை ரொம்பவும் நேர்த்தியாக square cut அடித்து பவுண்டரிக்கு அனுப்புவதை நான் பார்க்கவேண்டும்; அதே சமயம், அவருக்கு அதனால் ரன்னும் கிடைக்காமலிருக்க வேண்டும்'..இப்படித்தான் இருக்கிறது இன்றைய 'நல்ல கிரிக்கெட்'டின் ரசனை. Match fixing, booking என்று இடைத்தரகு முதலாளிகளின் கையில் கிரிக்கெட் போய்விட்ட சூழ்நிலையில், இனியும் இந்த விளையாட்டில் எதை ரசிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உலகக் கோப்பைக் கால்பந்தாட்டப் போட்டி சமயத்தில் மட்டும்தான் கால்பந்தாட்டம் பற்றிய கவனம் நம்மில் பலருக்கு வரும். அதுபோல, உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி சமயங்களில் மட்டுமே கிரிக்கெட் பற்றிய எண்ணங்கள் நமக்குத் தோன்றினால் போதும் என்று படுகிறது.

மீண்டும் சன் டிவி பக்கம்...ஆயிரம்தான் சொன்னாலும் சன் டிவிக்கு ஆதரவாக ஒருவித TINA (There Is No Alternative) factor நிலவத்தான் செய்கிறது. மென்னையான, மனதிற்கிதமான மெலடிவகைப் பாடல்களை சன் டிவியில்தான் கேட்க முடிகிறது. என்ன...நேரம் கொஞ்சம் oddஆகத்தெரியும்... இந்திய நேரப்படி இரவு ஒரு 11:30 மணிக்குமேல் சேனலை நோக்கினால், 'ஆஹா இன்ப நிலாவினிலே..', ' நீதானா என்னை அழைத்தது...' போன்ற கண்டசாலாவின் தேமதுர கானங்களையோ அல்லது 'ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்...''(சிகப்பு மல்லி), 'தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்...' (உல்லாசப்பறவைகள்) போன்ற இசைஞானியின் உன்னதமான இன்னிசைப் பாடல்களையோ நீங்கள் கேட்க நேரிடலாம்.

இந்த இன்னிசைப்பாடல்கள் மாலை நேரங்களில் ஏன் ஒலிப்பதில்லை? வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் மெகா சீரியல்களின் அழுதுவடியும் காட்சிகள் சற்று அமங்கலமாகத் தோன்றவில்லை? ஏசியாநெட், கைரளி...அதிலேயும் இதே கதைதான். அழுகை, அழுகை, அழுகை...(கரையரது மோளே கரையரது)... ஜீடிவியும், ஸ்டார் ப்ளஸ்ஸும் என்ன வாழுதாம்...ஹிந்தியில் அழுகிறார்கள். தெலுங்கு நண்பரிடம் விசாரித்தேன்...டிவியிலும் அழுகைதானாம், பெரும்பாலும் எல்லா சீரியல்களிலும். தேசிய அளவில் நதி நீர்களை இணைக்க முடியுமோ இல்லையோ, இந்த கண்ணீர் நதிகளை இணைக்கமுடிகிறது. இந்துத்வம் அல்ல...இந்தக் கண்ணீர் சிந்துத்வம் தான் இந்தியாவை இணைக்கிறது.



டிவி தொடர்கள் துவக்க காலத்தில் அவ்வாறு இல்லை. தூர்தர்ஷனில் வெளிவந்த 'ஹம்லோக்', 'ஏ ஜோ ஹை ஜிந்தகி' (1984-85) மற்றும் 'மால்குடி டேய்ஸ்' (1989-90) போன்ற ஹிந்தித் தொடர்களாக இருக்கட்டும், 'ஒரு மனிதனின் கதை' 'தரையில் இறங்கும் விமானங்கள்', 'நல்லதோர் வீணை' போன்ற தமிழ் தொடர்களாக இருக்கட்டும், பார்வையாளருக்கு வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதொரு அற்புதமான பரிமாணத்தையும், நான்ஸ்டாப்-நகைச்சுவையையும், நல்ல ரசனை அனுபவத்தையும் வழங்கியது. இதுதவிர, Bodyline Series, Giant Robot, Star Trek, Different Strokes போன்ற ஆங்கிலத் தொடர்களும் மற்றும் Spiderman-Cartoonம் நான் அதிகம் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சிகள் எனலாம். மத்தியதர வர்க்கத்தினரின் அன்றாட வாழ்க்கைப் போராட்டம் அல்லது ஒரு தனி மனிதனின் மனதுக்குள் நிகழும் உணர்வுப் போராட்டம்...இவைதான் பெரும்பாலனா கதைகளின் களம். சிறந்த சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள்தாம் பெரும்பாலும் டிவி தொடர்களாக வருகின்றன. அழுகை இல்லை, மிகைப்படுத்துதல் இல்லை...மாற்று சிந்தனை, கவித்துவம், கலை நயம், யதார்த்தமான கதாபாத்திரம், அங்கதம் நிறைந்திருக்கும் இந்த டிவி தொடர்கள், அவற்றின் படைப்பாளிகளின் அறிவையும், திறமையையும், ஆற்றலையும் மட்டுமே பறைசாற்றுவதோடு நின்றுவிடாமல் பார்வையாளர்களின் ரசனையையும், பார்வையாளர் மீது படைப்பாளி கொண்டிருக்கும் மதிப்பீடுகளையும் எனக்கு உணர்த்தியது.
இன்றைய மெகா சீரியல்களோ, ஜனரஞ்சக சினிமாவே தேவலை என்று எண்ண வைத்துவிட்டது. இன்று, 'ஹியர் இஸ் க்ரேஸி' போன்றதொரு முழுநேர நகைச்சுவைத் தொடரைக்கூடக் கொடுக்க இயலாதது, சின்னத்திரை படைப்பாளிகளிடம் நிலவும் கற்பனைப் பஞ்சத்தையே காட்டுகிறது.
7ஜி ரெயின்போ காலனி, காதல், புதுப்பேட்டை, தவமாய்தவமிருந்து, வெயில் போன்ற படங்களின் தரம் சின்னத்திரை படைப்புகளில் இல்லை; சேரன், செல்வராகவன், தங்கர்பச்சான் போன்ற இயக்குனர்கள், நல்ல படைப்புகள் உண்டாக்குவதில் காட்டும் முனைப்பும், புதிய அணுகுமுறையும் சின்னத்திரை மெகா சீரியல் படைப்பாளிகளிடம் இல்லை என்பதும் வேதனை தரும் விஷயம்.