பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, December 27, 2007

தமிழில் குறும்படங்கள் (Short films)

இணையத்தில் கண்ட சில குறும்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். எனது கணினியில் ஆடியோவசதி இல்லாததால், ஆங்கில சப்-டைட்டில் உதவியுடன் சில படங்களைப் பார்க்க நேர்ந்தது. சில நிமிடங்களே திரையில் ஓடி, பார்வையாளரை/விமர்சகரை பல வரிகள் பேசவைக்கிறதா, அதுவே படத்தின் வெற்றி. அவற்றில் சில:

The Way (இயக்கம்: ராம்) என்றொரு அற்புதப் படம். தவளை (The Frog) என்று கூட தலைப்புக் கொடுத்திருக்கலாம். ஒரு தவளை ஜீவித்திருக்கும் சொற்ப காலத்தில் சந்திக்க நேரும் ஆபத்துகள்தான் எத்தனை... ஆபத்துகள் அற்ற பாதை என்றுதான் ஏதாவது இருக்கிறதா - இப்படித்தான் நான் புரிந்துகொண்டேன்.
The Way

மனதில் பதிந்த இன்னுமொரு படம் Memories (நினைவுகள்). எதிர்பார்த்தது போலவே போகும் கதையாக இருந்தாலும், படத்தின் சிறப்பம்சமாக நான் கருதுவது மிகச்சில கணங்களே வந்து போனாலும் நினைவில் நிற்கும் முகங்களான அஷோக்-நர்மதா ஜோடியையும் D. பிரவிண் குமாரின் ஒளிப்பதிவையும். Memoriesஐ எழுது இயக்கி தயாரித்திருப்பவர் ராகேஷ் ஸ்ரீதர்.
Memories

மேலும் சில படங்கள்:

ரசிகன்
தயாரிப்பு: L.V. பிரசாத் மற்றும் TV அகாதமி
இயக்கம்: சுதர்சன்

பாவி
R. பாரத்சிம்ஹன்

2025
இயக்கம் - ஹேமந்த் குமார்

குறும்படங்கள் பற்றிய மேலதிக விவரங்களுக்கு சென்னை கே.கே. நகரிலுள்ள திரு. பாலச்சந்தர் அவர்களை அணுகலாம் (கைப்பேசி எண்: 98842 84348). அவர் கைப்பேசிக்கு அடித்த போது, ரஜினியின் பாடலான ‘பொதுவாக எம்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ ஒலித்தது... உண்மையிலேயே, மனிதருக்குத் தங்கமனசுதான்.
DisABILITY என்றதொரு யதார்தமான படத்தொகுப்பை அவர்பங்குக்கு upload செய்துள்ளார். ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய தொகுப்பு அது.

Link:

குறும்பட விழா பற்றி இணையத்தில் வந்த செய்தி

Labels:

Wednesday, December 26, 2007

கத்தார் (Qatar) விடுமுறை நாட்களில்

பிழைப்புத்தேடி இங்கு வந்த பலருக்கு (குறிப்பாக கட்டுமானத் துறையில் பணிபுரிபவர்களுக்கு) விடுமுறை தினம் என்பது ஒரு வரப்பிரசாதம்; அன்று வேலைக்குப் போகவேண்டாம் என்பதற்காக அல்ல, அந்த விடுமுறை தினத்தில் பணிசெய்தால் Over Timeஆகக் கருதப்பட்டு கூடுதல் காசு பார்க்க முடியும் என்பதற்காக; இல்லையென்றால், வருடாந்திர விடுப்பு (annual vacation)சமயத்தில் ஒரு தினம் கூடுதலாகக் கிடைக்க வழிசெய்யும் என்பதற்காக. உடனே, ஹோலிடேய் என்பது ஜாலிடேய்தான் என்று கருதவேண்டாம். அந்நிய தேசத்தில் குடும்பத்தாரிடமிருந்து பிரிந்து வாழுதல் என்பது ஈடுசெய்யமுடியாத ஒரு இழப்பு. அதுவும் நல்ல கம்பெனியோ, நல்ல பணிசெயும் சூழலோ அமையாவிட்டால் மன அழுத்தம்தான் அதிகரிக்கும். நண்பர்கள், தங்குமிடம், போக்குவரத்து என்று எல்லாம் நல்லபடியாக அமைந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

வருடத்திற்கு இருமுறை (ரம்ஜான் மற்றும் பக்ரீத்) வரும் தொடர்விடுமுறைகள், சிலருக்கு அண்டைநாடுகளான அமீரகம் (UAE), பெஹ்ரெயின், ஒமான் என்று சென்றுவர உதவுகிறது. சிலருக்கு கத்தாரிலேயே இருக்கும் தங்கள் சொந்தபந்தங்களை, நாட்டு நண்பர்களை, ஊர்க்காரர்களை சந்திக்க ஒரு அருமையான வாய்ப்பாக அமைகிறது. இந்த டிசம்பர் மாத கடைசி இரண்டு வாரங்களில் வரும் விடுமுறைகள் உண்மையிலேயெ பாலைவனச் சோலைதான் - டிசம்பர் 18 (கத்தாரில் தேசிய தினம்) 19 முதல் 22 வரை (5 தினங்கள் பக்ரீத் பண்டிகைக்காக) 25 (கிருஸ்மஸ்), 28 (வார விடுமுறை - வெள்ளிக்கிழமை) 31 (நியூ யியர் ஈவ்).......

இந்த விடுமுறையில் சொல்லிக்கொள்ளும்படி செய்த காரியம் - நாங்கள் இருக்கும் பகுதியிலிருந்து ஒரு 175 கிமி தொலைவிலுள்ள உம் சைத் (Umsaied) என்ற இடத்திற்குச் சென்று வந்ததுதான். மற்றவை புகைப்படங்களில் காண்க.






Monday, December 24, 2007

கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் - Merry Christmas


Flash Comments at WishAFriend.com">


''தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே - அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே''


முன்பெல்லாம் விவித் பாரதியில் காலை எட்டேகால் முதல் எட்டரை வரை இந்து, முஸ்லிம், க்ரிஸ்டின் என மூன்று சமயத்தாரையும் திருப்திப்படுத்தும் வகையில் பக்திப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் அவசரத்தில் எதேச்சையாக காதில் விழுந்தும், அடிக்கடிக்கேட்க நேர்ந்ததாலும் அப்படியே மனதில் தங்கிய வரிகள்தான் அது - தேனினிமையிலும் ஏசுவின் நாமம் பாடல்.. இந்தப் பாடலை யார் எழுதினார்கள் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஜிக்கி அம்மாவின் இனிமையான குரலில் இந்தப் பாடலைக் கேட்டதாக நினைவு.

உங்கள் எல்லோருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

Labels:

Sunday, December 23, 2007

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில்




அண்மையில் திருவனந்தபுரம் சென்று வந்த எனது தந்தையார், அங்கு எடுத்த சில புகைப்படங்களை நேற்று எனக்கு மின்மடல் மூலம் அனுப்பியிருந்தார். அவற்றில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் - அனந்த பத்மநாப ஸ்வாமி திருக்கோயிலுக்குச் செல்லும் வீதி, குளம் மற்றும் கோயில் நுழைவு வாயில்.

இதுவரை, ஐந்து முறை திருவனந்தபுரம் சென்றுள்ளேன். 1981, 1983 மற்றும் 1990களில் உறவினர் இல்லத் திருமணத்திற்காகப் பெற்றோரோடும், 1994ல் திரைப்பட விழாவைக் காணும் முன்னிட்டும், 2000ல் அலுவலக காரணங்களிலானும் - இப்படிப் பல்வேறு காரணங்களால் சென்றிருந்தாலும், ஒவ்வோருமுறையும் அனந்தபத்மநாபனை சேவிக்க மட்டும் மறந்ததில்லை.

பழைய பாரம்பரியத்தின் சாயல்களும், நவீன கலாச்சாரப் படையெடுப்பின் தாக்கமும் ஒட்டியொட்டிக காணப்பட்ட ஆலயத்தினருகில் நான் கடைசியாகப் பார்த்த திருவனந்தபுர தெருக்களின் காட்சியைத்தான் இந்த புகைப்படங்கள் நியாபகப்படுத்துகிறது. நான் கண்ட நகரங்களிலேயே மிகவும் எளிமையான தோற்றத்தைத் தரும் ஒரு மாநிலத் தலைநகரம் எதுவென்றால் அது திருவனந்தபுரம்தான் என்று அறுதியிட்டுச் சொல்வேன். சாதாரண மனிதன் முதல் சனிமா நட்சத்திரங்கள் போன்ற பிரபலங்கள் வரை எளிமையையே ஆபரணமாகப் பூண்டிருந்த கேரள சமுதாயம் இன்றைய நுகர்வோர் கலாச்சாரயுகத்தில் எப்படி இயங்குகிறது என்பது வேறு விஷயம். ஆனால், கேரளத்தின் அடையாளம் என்று சொல்லும்போது என் நினைவுக்கு வருவது கதகளி, மோகினியாட்டம், களரிபயட்டு, தரவாடுகள், திருச்சூர் பூர யானைகள் அணிவகுப்பு, படகுப் போட்டி, ஓணம் பண்டிகை.. இதோடு பத்மநாப சுவாமி கோயில் கோபுரம்தான்.

திருவனந்தபுரத்தின் பெயர்க்காரணத்தை யாவரும் எளிதில் யூகித்துவிடலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. தாமரை மணாளன் என்று நம் தமிழில் மிக இனிமையாக வழங்கப் பெறும் அனந்த பத்மநாப சுவாமி கிடந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பார். ஆதிசேஷன் மீது மிக ஒய்யாரமாக புஜங்கசயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளின் திருவுருவச்சிலை ஒரே வாயிலில் நின்று தரிசிக்க இயலாதவாறு மிகப்பெரிய அளவில் உள்ளதால், பக்தனுக்கு வசதியாக மூன்று வாயில்கள் அமைந்திருக்கும். முதல் வாசலில் பெருமாளின் திருமுகத்தையும், இரண்டாவதில் பெருமாளின் திருவயிற்றுப்பகுதியும், மூன்றாவது வாயிலில் பெருமாளின் திருவடிகளையும் கண்டு சேவிக்கலாம். பெருமாளின் திருமுகத்தினருகே காணப்படும் சிவ லிங்கம் சைவ-வைணவ மோதல்களுக்கு ஒரு சவால். ஹரியையும் ஹரனையும் ஒருசேர தரிசித்து வணங்கும் வாய்ப்பு பக்தனுக்குக் கிடைக்கும் திருத்தலம் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள தாயார் - ஸ்ரீ ஹரி லக்ஷ்மித் தாயார்.
பன்னிரு ஆழ்வார்களுள் நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாக நான் அறிகிறேன்.

திருவாயமொழி பாசுரங்கள் பின்வருமாறு:

கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே (3794)

இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சார குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம் ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. (3795)

ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான் சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில் தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம் பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே. (3796)

பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம் நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. (3797)

புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால் திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். (3798)

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர் நமர்களோ. சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும் குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. (3799)


துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும் படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான் மடைத்தலை வாளைபாயும் வயலணியனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. (3800)

கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை இடவகை கொண்டதென்பர் எழிலணியனந்தபுரம் படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண நடமினோ நமர்களுள்ளீர். நாமுமக் கறியச்சொன்னோம் (3801)

நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம் தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. (3802)

மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும் ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. (3803)

அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில் பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. (3804)


பத்மநாப சுவாமி ஆலயம்/திருவனந்தபுரம் தொடர்புடைய கீழ்காணும் சில பயன் தரும் இணைப்புகள்:

ஆலயம் பற்றிய பதிவு

கானா பிரபாவின் ஆலய விஜயம்

சுவாதி திருநாள்

பத்மநாப சுவாமி ஆலயம்

***

Labels: