பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, February 14, 2008

காதல் வாழ்க

1. ஒரு ஆணும் பெண்ணும் நெருக்கமாகப் பழகினால், உடனே அது காதலாக இருக்குமென்று எடுத்துக்கொள்ளக்கூடாதாம், ஏனென்று கேட்டால், “அவர்கள் நல்ல நண்பர்களாகவோ, அல்லது அலுவலகத் தோழர்களாகவோ இருக்கலாம் இல்லையா? அவர்கள் தமிழிலக்கியம் பற்றியோ அல்லது ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியோகூட பேசிக்கொண்டிருக்கலாம் இல்லையா? ரொமான்ஸ் பண்ணுகிறார்கள் என்று எப்படி தடாலடியாக முடிவுக்குவரலாம்?" என்கிறார்கள்.

2. பைக்கிலோ, சைக்கிளிலோ, ஒரு பெண்ணையும், ஆணையும் ஒரு சேரப் பார்த்தாலோ அல்லது அலுவலக இடைவேளைகளிலோ, டிஸ்கோத்தேவிலோ, பீஸா ஹட்டிலோ, கையேந்தி பவனிலோ, இன்ன பிற பொது/தனி இடங்களிலோ மணிக்கணக்கில் சிரித்துசிரித்துப் பேசி அரட்டை அடிக்கும் ஜோடிகளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் இருவரும் காதல் ஜோடிகள் என்று முடிவுக்கு வந்துவிடக்கூடாதாம்.

சரி, அப்படியானால், எப்போதுதான் காதலர்கள் காதலிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வீர்கள்? சினிமாவில் வருவதுபோல விதவிதமான உடைகள் அணிந்து பற்பல இடங்களில், செட்டிங்ஸ்போட்டு ஆடிப் பாடினால்தான் அது காதல் என்று ஒத்துக்கொள்வார்களோ?

எது எப்படியோ, இன்றைய நுகர்வுகலாச்சார யுகத்தில், காதலுக்கு உரிய மரியாதை தருவது சினிமா மட்டும்தான்; அது வியாபார நோக்கில் என்றாலும், பல கவிஞர்களை, பல அசிஸ்டெண்ட் டைரக்டர்களை, பல வசனகர்த்தாக்களை காதலைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது; காதலர்களுக்காகப் பரிந்து பேச வைக்கிறது. நிஜவாழ்க்கையில் என்னவோ, பெற்றோர்கள் எல்லாக்காலத்தையும் போலவே காதலை அங்கீகரிக்க மறுக்கின்றனர்; காதலை 'சீச்சீ' என்றே பார்க்கின்றனர்.என்னமோ தெய்வகுத்தம் வந்தாற்போல் குதிக்கின்றனர். போதாக்குறைக்கு இந்த சாதி மத பேதங்கள் வேறு. இந்த பேதங்களை உடைத்தெரியவே காதல் திருமணங்கள் பெருக வேண்டும்.

காதலர் தினத்திற்கு அங்கீகாரம் தரும் வியாபார சமூகம் உண்மையில் காதலுக்கும் அங்கீகாரம் கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால், ‘ரோஜா வியாபாரிகளாவது வாழட்டும்’ என்று சொல்வதுபோல, ‘வாலண்டைன்ஸ் டேய்’ வாழ்த்து அட்டைகளையும், சிறப்பு பொக்கேக்களையும் விற்கும் ஏழை விற்பனர்களும் முகவர்களுமாவது வாழட்டும் என்ற அளவில் காதலர் தினங்கள் நின்றுவிடும்.

எது எப்படியோ, இந்தக் காதலர் தினத்தில் காதலுக்கும், ஏழை வியாபாரிகளுக்கும் என் வாழ்த்துக்கள்! :)

Labels: ,