பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Wednesday, April 19, 2006

Revathy - belated birthday greetings to Revathy...8th July....is birthday of ரேவதி - தமிழ்த் திரைப்படங்களில் தோன்றிய நடிகைகளிலேயே என்னை அதிகம் கவர்ந்தவர், மண்வாசனைக் காலம்தொட்டே, டீஸன்டான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யும் அவரது பண்பும், இன்று சிறிய கதாபாத்திரங்களே ஏற்று நடிக்கும் சூழலில், அவரது யதார்த்தமான நடிப்புத் திறனும், தவிர, `பப்ளிசிடி’ செய்வதில் மெனக்கெடாமல் சமூகநலன் கருதி உண்மையிலேயே சில பொதுசேவைக் காரியங்களில் ஈடுபட்டுவருவதாலும், இன்றுவரை, அவர்மீது மதிப்பும் மரியாதையும் எனக்குண்டு. அவர் இயக்கத்தில் வெளியான Mitr, My Friendம், Phir Milengeயும் அவர் சமூகத்தின்பால் கொண்டுள்ள அக்கறைக்குச் சான்று.

மேலும், 1996 பாரளுமன்றத் தேர்தலில் தென்சென்னைத் தொகுதியில் எந்தக்கட்சியின் தயவுமின்றி ரேவதி, சுயேட்சையாகப் போட்டியிட்டபோது, 40,000 வாக்குகளுக்கும் மேலாகப் பெற்றார். மார்க்ஸிஸ்டுடள் ஆதரவுடன் போட்டியிட்ட ம.தி.மு.கவையும், கணிசமான வாக்குவங்கியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியின் டாக்டர் மைத்ரேயனையும்விட (கட்சியின் அன்றைய மாநிலச் செயலரில் ஒருவர்) அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் ரேவதி வந்தது குறிப்பிடத்தக்கது.

திரைப்படக் கலைஞர்களில் என் மனதில் இடம்பிடித்தவர்கள் என்று பெரிய பட்டியலே உண்டு - நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், பாலாசிரியர்கள், பாடுபவர்கள்...என நீளும்... எனினும், நடிகைகள் என்று வரும்போது, மிகச்சிலரே என் ரசனைக்கு ஒத்துவருகின்றனர் - பொதுவாழ்வில் அவர்களது செயல்கள் குறித்த என் அபிப்ராயங்கள்கூட ஒரு காரணமாக இருக்கலாம் (உடனே, நடிகர்கள் யோக்கியமா என்று கேட்கவேண்டாம்). பொதுவாகவே நமக்குள் பொதிந்துகிடக்கும் ஆணாதிக்க மனோபாவமேகூட ஒரு காரணமாக இருக்கலாம். இவையனைத்தையும் மீறி, சில திரைப்படங்களில், சில நடிகைகளின் சிறப்பான பாத்திரப்படைப்பும், அவர்களது திறமையான நடிப்பும் என்னைக் கவரத்தவராமலில்லை. இதற்கான பெருமைகள் அந்த படங்களின் இயக்குனரையும் அந்தந்த நடிகைகளையே சாரும்.
அங்கனம் நான் கண்டுகளித்த படங்களில் கதாபாத்திரத்தோடு ஒன்றி, நடிப்பில் உயரம் காட்டிய நடிகைகளும் ஏராளம்...இப்போது என் ஞாபகத்தில் வந்தவர்களை மட்டும் சொல்கிறேன்...

பானுமதி அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மலைக்கள்வன்..
T.R.ராஜகுமாரி சந்திரலேகா, மனோகரா..
கண்ணாம்பா மனோகரா..
K.B.சுந்தராம்பாள் ஔவையார், திருவிளையாடல்...
சாவித்திரி களத்தூர் கண்ணம்மா, மிஸ்ஸியம்மா
பத்மினி தில்லான மோகனாம்பாள், வியட்னாம் வீடு, பூவே
பூச்சூடவா
வைஜயந்திமாலா வஞ்சிக்கோட்டை வாலிபன், தேன் நிலவு
சரோஜாதேவி கல்யாணப்பரிசு, தாமரை நெஞ்சம்
தேவிகா நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்கம் மறப்பதில்லை
சௌகார் ஜானகி இரு கோடுகள், காவியத்தலைவி
வாணிஸ்ரீ வசந்த மாளிகை
வெண்ணிற ஆடை நிர்மலா வெகுளிப்பெண்
சுஜாதா அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அன்னக்கிளி, விதி
ஸ்ரீவித்யா சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள்
ஷோபா நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், ஏணிப்படிகள், பசி
அஸ்வினி உதிரிப்பூக்கள், நண்டு
லக்ஷ்மி சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம்
பார்க்கிறாள், சிறை, சம்சாரம் அது மின்சாரம்
சரிதா அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர்,
வண்டிச்சக்கரம், நூல் வேலி, நெற்றிக்கண்
ஸ்ரீதேவி பதினாறு வயதினிலே, மூன்று முடிச்சு, சிகப்பு
ரோஜாக்கள், வருமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை,
தர்ம யுத்தம்
ஸ்ரீப்ரியா அவள் அப்படித்தான், நட்சத்திரம், வாழ்வவே மாயம்
சுஹாசினி நெஞ்சத்தைக் கிள்ளாதே, பாலைவனச் சோலை ஒரு
இந்தியக் கனவு, சிந்து பைரவி, கோபுரங்கள் சாய்வதில்லை, கூடெவிடே? (மலையாளம்) என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, மணுவத்தூரிலே ஆயிரம் சிவராத்திரிகள் (மலையாளம்),
ராதிகா மீண்டும் ஒரு காதல் கதை, நீதிக்கு தண்டனை, ஸ்வாதி
முத்யம் (தெலுங்கு), தென்றல் சுடும், ஜீன்ஸ்
அர்ச்சனா வீடு, சந்தியா ராகம், ரெட்டை வால் குருவி
ராதா முதல் மரியாதை, நியாயத் தராசு
ஷோபனா தளபதி, Manichithrathaazh
ரம்யா கிருஷ்ணன் படையப்பா
சிம்ரன் வாலி, கன்னத்தில் முத்தமிட்டால், பார்த்தாலே பரவசம்
மீரா ஜாஸ்மின் கஸ்தூரி மான்
பானுப்ரியா அழகன், சுந்தர காண்டம்
விஜயஷாந்தி பூ ஒன்று புயலானது, வைஜயந்தி ஐ.பி.எஸ்.
நதியா பூவே பூச்சூடவா
ரோஹினி மறுபடியும், மகளிர் மட்டும்

மேலும், கீழ்காணும் சில நடிகையரின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது எனலாம்.

அம்பிகா அந்த ஏழு நாட்கள், நான் பாடும் பாடல்
ஊர்வசி முந்தானை முடிச்சு, மைக்கேல் மதனகாமராஜன்
ரேகா கடலோரக் கவிதைகள்
சசிகலா இளமைக் காலங்கள்
ஜெயஸ்ரீ வண்ணக்கனவுகள்
கீதா கடமை கண்ணியம் கட்டுப்பாடு
சீதா உன்னால் முடியும் தம்பி
அமலா அக்னி நட்சத்திரம்
கவுதமி நீபாதி நான்பாதி, தேவர் மகன், குருதிப் புனல்
கிரிஜா இதயத்தைத் திருடாகதே
சித்தாரா புது வசந்தம்
சுகன்யா சின்னக் கவுண்டர்
சங்கீதா பூவே உனக்காக, சிந்தாவசிஷ்டயாய ஷ்யாமளா (மலையாளம்)
ஹீரா காதல் கோட்டை
ஜோதிகா குஷி, சிநேகிதியே
ஷாலினி அலைபாயுதே, காதலுக்கு மரியாதை
மீனா ரிதம், பாரதி கண்ணம்மா, சீதா ராமைய்யக்காரி மணவாராலு
(தெலுங்கு)
லைலா பிதாமகன்
கிரண் அன்பே சிவம்
சோனியா அகர்வால் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி
உமா தென்றல்
சினேகா ஆட்டோகிராஃப், ஏபிசிடி
நவ்யா நாயர் அழகிய தீயே
அஸின் கஜினி
பாவனா சித்திரம் பேசுதடி, தெய்வநாமத்தில் (மலையாளம்)

இது தவிர, நம்முடைய ஆச்சி மனோரமாவின் நகைச்சுவை நடிப்பும், சுகுமாரி, சுந்தரிபாய் போன்றோரின் யதார்த்தமான நடிப்பும், அம்மன் வேடத்தில் வரும் K.R. விஜயா, மாமியார் பாத்திரத்திற்குப் பொருந்தும் M.N.ராஜம், கவர்ச்சியில் சில்க் ஸ்மிதா, எந்தக் கதாபாத்திரமானாலும் அதோடு ஒன்றிப்போகும் ஜெயச்சித்ரா, பிறமொழியிலிருந்து தமிழ்ப்படத்தில் அவ்வப்போது தலையைக் காட்டிய நந்திதா தாஸ், ஜெயசுதா, ஜெயப்ரதா இவர்களிடமும் ரசனைக்குறிய திறம் இருப்பதாகவே தோன்றுகிறது.

இன்னும் யோசித்தால், இன்னும் பட்டியல் நீளும்...சுமித்ரா (புவனா ஒரு கேள்விக்குறி), லதா (வட்டத்துக்குள் சதுரம்), படாஃபட் ஜெயலக்ஷ்மி (ஆறிலிருந்து அறுபதுவரை)......என முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கும்.

...குஷ்பு, ரோஜா, ரம்பா, த்ரிஷா போன்றவர்கள் என்றுமே என் ரசனைக்குறியவர்களாக இருந்ததில்லை; மேலும் திறமைசாலியாகவும் எனக்கு அவர்கள் தென்படவில்லை. ஆனால், ஒருவித கவர்ச்சி சக்தியால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.

தொடர்ந்து நம் சமுகத்தில் நிலவும் ஆணாதிக்கச் சிந்தனையும் போக்குமே பெண்களின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமற் செய்கின்றன. இந்த அவலநிலைக்கு, சினிமாத்துறையும் விதிவிலக்கல்ல. எத்தனையோ திறமைகளிருந்தும், அதனை வெளிக்கொணர்வதற்கான வாய்புகள் மிகக் குறைவான சூழலிலும் (against overwhelming odds) தமிழ் சினிமா ரசிகர்கள் நினைவு கூறத்தக்க அளவில் அவர்கள் மனதில் பதிந்த கதாபாத்திரங்களாக நிலைத்துக்கொண்டிருப்பதே மிகப்பெரிய சாதனைதான்.

ஏற்கனவே நான் சொன்னது போல இந்தப் பட்டியல் exhaustive ஆனதல்ல; யோசித்தால், இன்னும் நிறையபேர் ஞாபகத்திற்கு வருவார்கள்...

Labels:

Thursday, April 13, 2006

சோதனை போஸ்ட்

for the past one month and so, i could not post any blog due to some technical snag in my computer/modem/DSL line, I could not find the exact cause and I dont know how to overcome this problem....I appeal to my blogger brethen to help me fix the problem....

thanking you,

vv

சினிமா விமர்சனம்

"சினிமா விமர்சனம் என்பதில் விமர்சகருடைய சொந்த
விருப்பு வெறுப்புகளும் சேர்ந்துதான் இருக்குமா?" சில நாட்களுக்கு முன்னர், இந்தக் கேள்வியை என்னிடம் கல்யாண்தான் கேட்டார் என்று நினைக்கிறேன். இதற்குச் சரியான பதில் எனக்குத் தெரியாது.

ஆனால், சில சமயம், சொந்தக் கருத்துகள், பிரச்சாரநெடிகள், துவேஷங்கள் இவையெல்லாம்கூட விமர்சனத்தில் பொதிந்திருப்பதைப் பார்க்கிறேன். சில சமயங்களில், சில விமர்சனங்கள், அந்தப் படங்களைவிட சுவையாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு வலைப்பதிவில் சுதேசி படத்திற்கான விமர்சனத்தை அதிகம் ரசித்தேன். படம் பார்த்த பாவம், அந்த விமரிசனம் வாசித்ததனால் போனதாகக்கூட எண்ணுகிறேன் (கொஞ்சம் ஓவராகத் தெரிந்தால் மன்னிக்கவும்). விமரிசகர் செய்யும் நக்கலில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. யாம் பெற்ற இன்பம் இவ்வையம் பெற க்ளிக்குங்கள் இங்கே
http://pravunplugged.blogspot.com/2006/03/sudhesi-must-watch.html சுதேசி பார்த்தவர்கள், பாபவிமோசனம் பெற...

நல்ல படங்களைத் தேர்வு செய்து காண்பதற்கு, விமர்சனங்கள் உதவவேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், விமர்சனங்களுக்காகக் காத்திராமல் படம் பார்க்கப்போவோர் எராளம். அவர்களைத்தான் சினிமா உலகமும் நம்பியிருக்கிறது. ஏற்கனவே திருட்டு VCDயினால் அதிகம் பாதிப்புக்குள்ளான, வியாபாரரீதியாக எடுக்கப்படும் ஜனரஞ்கப் படங்கள், தியேட்டரில் வந்து பார்க்கும் ஜனங்களையே முழுவதுமாக நம்பியிருக்கும் சூழலில், திரைப்படத்துறையினர் எந்த விமிர்சனத்திற்கும் தயாராக இல்லை என்பதுதான் எதார்ததமான உண்மை. அவர்களைப் பொருத்தவரை விமர்சனம் என்பது ஒருவகை விளம்பரமாக மட்டுமே இருக்கவேண்டுமென்று ஏங்குகிறார்கள்.

அதேசமயம், விமரிசனங்களின் மூலமாக தன் அதிமேதாவிலாசத்தையும், கொள்கைச்சார்புகளையும் வெளிக்காட்டும் போக்கும் விமர்சகரிடையே பரவலாக இருக்கத்தான் செய்கிறது. சகட்டுமேனிக்கு, குருட்டாம்போக்கில் அள்ளிவீசும் விமர்சங்களும் உள்ளன. சன் டி.வி. அதைத்தான் செவ்வனே செய்துவருகிறது.

என்னைப் பொருத்தவரை, சீரியஸ் பிக்சருக்கென்று ஒரு விமரிசனம் உண்டு, ஜனரஞ்சகப் படங்களுக்கென ஒரு பாணி விமரிசனம் உண்டு.

இந்தக் கலைப்படங்களும், சீரியஸ் படங்களும் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? கவனச்சிதறல்களுக்கு இடம்தராமல், ஒருவித சிரத்தையோடு படத்தைக் காணும் அணுகுமுறையாகத்தான் இருக்க முடியும். விமர்சகருக்காகவென்றும், கண்டு சர்ச்சிக்க வேண்டுமென்றும் யாரும் படம் எடுப்தில்லை. தத்துவார்த்த ரீதியில், விமரிசனங்கள் இருக்கும்போது, படத்தைவிட விமரிசனத்திற்கே பல விமரிசனங்கள் எழுவதையும் பார்க்கிறேன். அதேபோல, ஒரு ஜனரஞ்கப் படத்தை, அதிசீரியஸ் கண்ணோடு அக்குவேறு ஆணிவேறாக (part by partஆக) புரட்டிப்போட்டு விமரிசனம் செய்ய மெனக்கெடுபவர்களைப் பார்க்கும்போது 'வேற வேலை வெட்டி இல்லையோ' என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்தமாதிரி விமர்சனங்களின் மூலமாகப் படத்தைப் பற்றிய பொதுவான அபிப்ராயம் சொல்லப்படுகிறதோ இல்லையோ, விமர்சகரின் பார்வையும் எண்ணமும் கூடவே அவரது அதிகபிரசங்கித்தனமும்தான் வெளிவருகிறது.

குறைந்தபட்சம், விருப்பு வெருப்பு இல்லாமல் இருக்கும் விமர்சனம் என்றால், என் பால்யப் பிராயம்முதல் நான் நம்புவது The Hinduவையும் ஆனந்த விகடனையும்தான் என்று சொன்னால் மிகையாகாது. மற்றபடி, sify, chennaionline, tamilcinema.com போன்ற வலைத்தளங்களிலும், குமுதம், கல்கியிலும் கூட சில சமயங்களில் நல்ல விமரிசனங்களைக் காணமுடிகிறது. எனக்கென்று சில தனிப்பட்ட அபிப்ராயங்கள் இருந்தாலும், இந்த விமரிசனங்களோடே பொதுவாக ஒத்துப்போதிறேன்.


தவிர, எனது விமர்சனங்கள் எனது அனுபவங்களின் பதிவுகளாகத்தான் கொள்ளவேண்டும். சுருக்கமாகச் சொன்னால், அவை என் சொந்த டைரி குறிப்புகள். அவை ஒன்றும் 'தீர்க்கமான முடிவுகளாக' இருக்க வேண்டிய அவசியமும் இல்லை; படத்தின் வெற்றிதோல்வியை நிச்சயிக்கும் சக்திவாய்ந்ததாகவோ இருக்கவேண்டிய நிர்பந்தமும் இல்லை. மேலும் தியேட்டருக்குச் சென்று படம் காண முடியாத இந்த ஊரில், VCDயில் நண்பர்களோடு ஒன்றாகப் படம் பார்க்கும்போது, அந்தச் சூழலின் தன்மைகளும், அவர்கள் அடிக்கும் commentகளும் படம் பார்க்கும் என் கண்ணோட்டத்தைப் பாதிக்காமல் போகாது. என் விமர்சனங்களிலும் இது பிரதிபலிக்கத்தான் செய்யும். விமர்சனம் எழுதுவதற்காகவே டிவி முன்பு, பேனா பேப்பர் சகிதமாக உட்கார்ந்து கொண்டு படம் பார்க்க என்னால் இயலாது.

ஒரு நல்ல புத்தகம், முதல் வாசிப்பில் ஒரு உணர்வையும், மறு வாசிப்பில் வேறு வித உணர்வையும் தருவதைப்போலத்தான் சினிமாவும். இரண்டாவது முறையாகப் பார்க்கும்போது, சில விஷயங்கள் புதிதாகப் படுவது இயல்பான விஷயமானாலும், அப்படத்திற்கு முதலில் நான் எழுதிய விமர்சனம் காலாவதியாவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது.

எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத, சட்டென்று இப்பொழுது என் நினைவுக்கு வரும் என் டாப் டென் தமிழ் படங்கள் என்றால் கீழ்க்காணும் படங்களைச் சொல்லலாம். எது நம்பர்-ஒன், நம்பர்-டூ என்று முறையாக வரிசைப்படுத்த இயலாததால், படங்கள் வெளியான காலவரிசையில் (chronological order) தந்துள்ளேன்.

எதிர் நீச்சல்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
உதிரிப்பூக்கள்
அழியாத கோலங்கள்
அவள் அப்படித்தான்
முதல் மரியாதை
மௌன ராகம்
நாயகன்
அழகி


டாப் 25 என்றால், அதில் அந்த நாள், கல்யாணப் பரிசு, அபூர்வ ராகங்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மூன்றாம் பிறை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, மஹாநதி, தவமாய்த் தவமிருந்து... போன்ற படங்களைச் சேர்க்கலாம்.

டாப் 50 என்றால் நெஞ்சில் ஓர் ஆலயம், முகமது-பின்-துக்ளக், அச்சமில்லை அச்சமில்லை, வேளடி கண்மணி, தேவர் மகன், அன்பே சிவம், 7ஜி ரெயின்போ காலனி, காதல், ஆட்டோகிராஃப், பிதாமகன்....என இன்னும் நீளும்...

டாப் 100ல் கமலின் அபூர்வ சகோதரர்கள் மற்றும் விசுவின் சம்சாரம் அது மின்சாரம், பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள்.........எல்லாம் வரலாம்.

Labels:

Monday, April 10, 2006

வாக்காளர் பெருமக்கள்

தேவை கூட்டணி அரசு என்ற தலைப்பில் மாலன் திசைகள் வலைப்பதிவில் http://thisaigall.blogspot.com/ அருமையாக அலசலையும். பின்னூட்டங்களின் மூலம் சுவையான விவாதத்தையும் கண்டேன். வாசித்து முடிந்தபின் என் மனதில் தோன்றியது...

கட்சிசாரா வாக்காளர்களில் முன்று வகையினரை நான் காண்கிறேன். ஒன்று, அனைத்துக் கட்சிகளின் மீதும் நம்பிக்கை இழந்தாற்போல் 'அத்தனை அரசியல்வாதிகளையும் செருப்பால அடிக்கணுமய்யா, மிலிட்டரி ரூல் வந்தாத்தான் நாடு உறுப்படும்' என்று punch கொடுக்கும் சாமானிய மக்கள்; யாருக்கு ஓட்டுப் போடுகிறோமென்பதை யாரிடமும் எந்தச் சூழலிலும் வெளியிட விரும்பாத நடுத்தர வர்கத்தினர்.

இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் மேல் அதன் கொள்கைகளுக்காக செயல்திட்டங்களுக்காக `இவர்கள் நம் சமூகத்திற்கு எதிரி. இவர்கள் ஆட்சிக்கு வரவேகூடாது' என்ற எண்ணம் (vindictive menatility) மேலோங்க அக்கட்சியினை வெல்லும் திறந்வாய்ந்த கட்சிகளுக்கு, மற்ற விஷயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஓட்டுப்போடுபவர்கள்; சமுதாயத்தில், upper, middle, lower என எல்லாவகுப்பிலும் பரலாகக் காணப்படுபவர்கள்.

மூன்றாவதாக, "எனக்குப் பாலிடிக்ஸ், எலக்ஷன், இதுலயெல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லை ஸார்" என ஒதுங்குபவர்கள்; `நம்ம நண்பர் சொன்னார், சொந்தக்காரர் சொன்னார்' அதனால்தான் அவருக்கு இந்ததடவைப் போட்டேன்' என்பார்கள்; விஜயகாந்த் கட்சியின் பெயரைக் கேட்டால் தெரியாது என்பார்கள்; BJPலயா இருக்காரு திருநாவுக்கரசு என்று அப்பாவித்தனமாகக் கேட்பவர்கள்.

இப்படிப்பலரும் இருக்கிறார்கள். Exit pollல் யாருக்குப் போடுவதாகச் சொன்னார்களோ, அவர்களுக்குப் போடாமல், மற்ற கட்சிக்கு வாக்களிக்கும் நம் ஜனநாயக மன்னர்கள் நிறையபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்...

கூட்ணி ட்சி

மாலன் அவர்களின் வலைப்பதிவில் கூட்டணி ஆட்சி உருவாவதற்கான சாத்தியக்கூறுகளைத் தெளிவாகக் கூறியுள்ளார். http://thisaigall.blogspot.com/.

இதுபற்றியும், தேர்தல் முடிவுகள் குறித்தும் எனக்குத் தோன்றுவது:

(1) தி.மு.கழகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து கலைஞர் முதல்வரானாலும், தனிப்பெருங்கட்சியாக அ.தி.மு.க. உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அம்மாதிரியான சூழலில், காங்கிரஸின் கரமும் ஓங்கும், பாமகவின் பிடியும் இறுகும்.

(2) அதேபோல, தொங்கு சட்டசபை உருவாகும் சூழலில், அ.தி.மு.க. தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தால், பாமகவும், காங்கிரஸும் தீர்மானிக்கும் சக்திகாளாக (அதாவது, துணிச்சலுடன் இடப்பெயர்ச்சிக்குத் தயாராகும் நிலைக்கு) வரும் வாய்ப்பும் உள்ளது.

மேற்சொன்ன (1) மற்றும் (2) போல நடந்தால், காலப்போக்கில், நல்லதோ, கெட்டதோ, கூட்ணியாட்சி என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல சிறு கட்சிகளின் மவுசு பெரியகட்சிகளிடத்தே அதிகரிக்கும்.

மத்தியக் கூட்டணியில் பிராந்தியக் கட்சிகள் அதில் பங்குபெறும் சக்திகளாக உருவெடுக்கும்போது, மாநில அளவிலும், சிறிய கட்சிகள் (sub-regional parties) என்றுமில்லாத அளவிற்கு முக்கியத்துவம் பெற வாய்ப்பிருக்கிறது. அப்புறமென்ன, வால் நாயை ஆட்டும் கதை இங்கும் அரங்கேறும்...

Saturday, April 08, 2006

மூன்று சந்திப்புகள் (Three Meetings)


கடந்த ஒருமாதமாகலமாக, இந்த ஒண்ணரையாண்டாக நிகழாத சில நிகழ்வுகள் எல்லாம் நடந்தன. ஒன்றுமில்லை, அரபு தேசிய வங்கியில் ட்ராஃட் எடுக்கப்போனபோது, ஒரு புதிய தமிழ் நண்பர் கிடைத்தார். பெயர் அருண். கணிபொறித்துறையில் பணி. பாலக்காடுதான் பிறந்த ஊராம். தற்சமயம் வாசம் பொள்ளாச்சியில். என்போன்றே மலையாள சினிமாப் பிரியர் என்று தோன்றியது. ஹாராவில்தான் ஜாகை. சுத்தமான சைவர்; சமைத்துத்தான் சாப்பிடுகிறாராம் (சிகரெட் மட்டும் அப்பப்போ..) மனிதர் செய்த மிகப்பெரிய உபகாரம், என்னை ஒரு கூட்டத்திற்கு அழைத்ததுதான். அது ரியாத் இந்திய யாஹூ குழுமத்தின் சங்கமம். பத்தாவிலுள்ள halfmoon ரெஸ்டாரண்டில்தான் கூட்டம் என்றவுடனேயே, சாப்பாடு உறுதியானது. (நுழைந்தவுடனேயே, 20 ரியாலை வாங்கிவிட்டார்கள் என்பது வேறு விஷயம்).

டாக்டர். மாசிலாமணி அவர்களை முதன்முதலாக அங்குதான் சந்தித்தேன். கேன்ஸர் நோய் குறித்த ஆராய்ச்சியில் பெரிய breakthrough-ஐ ஏற்படுதியவர். தோற்றத்தில் எளிமை, ஆழமான பேச்சு (ஆங்கிலத்தில்தான்), நல்ல ஹாஸ்யம், கலக்கிக்கொண்டேபோனார் டாக்டர். வந்திருந்தவர்கள் பட்டியல் காஷ்மீர்முதல் கன்யாக்குமரிவரை நீண்டு ஒரு இந்திய outlook கொடுத்தாலும், பெரும்பான்மையினோர் கேரளத்தினரே. அப்புறம், மிகமுக்கியமான விஷயம், தேசிய கீதம்...முதன்முறையாக ஜனகனமன...அந்நிய மண்ணில் சேர்ந்து பாடியது!

பின்குறிப்பு: டின்னருக்கு மலையாளத்தில் அத்தாழம் என்கிறார்கள்

இரண்டுவாரத்திற்கு முன்னர், மோகன் அறிமுகமானார். எதேச்சையாக ரியாத் தமிழ் சங்க யாஹூ குழும மடலொன்றின் மூலமாகக்கிட்டிய அவர் பொலைபேசி எண்ணுக்கு அடித்தேன். தனிப்பட்டமுறையில் சில விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அப்படியே, கல்யாணைத் தெரியுமா என்று யதார்த்தமாக விசாரித்து வைத்தேன். தெரியுமென்றவர், அவரைப்பற்றிய ஒரு சிறுகுறிப்பே கொடுத்தார். அதைவிட, to my utter surprise, மறுநாள் கல்யாணே என்னைத் தொடர்பு கொண்டார். சாகரன் என்று வலைப்பதிவுகளில் அறியப்படுபவரும், பல மாதங்களாக ரியாதில் நான் அங்கும் இங்கும் தேடிய அதே கல்யாண்! நான் ஏதோ 40-45 வயசுக்காரராக இருப்பாரோ என்று நினைத்திருந்தேன். பார்த்தால் நம்மைவிட இளையவர். தொலைபேசியில் பேசும்போது சூர்யாவின் குரல்மாதிரியே இருந்தது... லக்கி ரெஸ்டாரண்ட் வாசலில் காத்திருப்பதாகச் சொன்னார். Dinner உறுதியென்று எண்ணினேன். ஆனால் அப்போது, சாப்பிடவில்லை, வீட்டிற்கு நேராக அழைத்துச்சென்றார். பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் டச் பண்ணாமல் கொஞ்சம் flash backல் மலர்ந்த நினைவுகளை மட்டும் பறிமாறிக்கொண்டோம். பின்னர், மோகனையும் அழைத்துக்கொண்டு காரில் ஒரு ரவுண்ட் வந்தோம். முக்கியமாக, Al-Hayat ரெஸ்டாரண்டில் ஒரு விருந்தே வைத்தார்.

அடுத்த நாள், வியாழன் மாலை, வளைகுடா மானுட வசந்தம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியொன்றிற்கு அழைத்துச் சென்றார் கல்யாண்.


டாக்டர். கே. வி. எஸ். ஹமீத் முகமது பற்றி அப்போதுதான் கேள்விப்பட்டேன். இஸ்லாம் குறித்த அனைத்துவித கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னார். இஸ்லாம் பற்றிய தவறான அபிப்ராயத்தைப் போக்கும் விதத்திலும், இஸ்லாமியர்கள் அல்லாதவருக்கு இஸ்லாம் குறித்த இனிய அறிமுகமாகவும் இருந்தது நிகழ்ச்சி..

நிகழ்ச்சி சிறப்பாக அமைய அங்குமிங்கும் ஓடித் தன்னார்வத் தொண்டு புரிந்த முஸ்லிம் இளைஞர்கள், உபசரிப்பு விஷயத்தில் காட்டிய பரிவும், அக்கறையும் பாரட்டுதலுக்குறியது. தவிர, buffet முறை dinner-ல், சைவம் தனியாக, அசைவம் தனியாக எனப்பிரித்து இரண்டு வகைப்படுத்தியது, எனக்கு வசதியாகவும், இனிய ஆச்சரியமாகவும் இருந்தது. அதைவிட இரண்டு புதிய வலைப்பதிவினரையும் கல்யாண் அறிமுகப்படுத்தினார் (நாகை. இளங்கோவன் மற்றும் ராஜா) அவர்களும் கணிப்பொறித்துறையினர்.

விழாமுடிந்து நாகை. இளங்கோவன் தங்கியிருந்த Al Yamama ஹோட்டலுக்குப் போனோம். வரும் சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் பற்றிய கணிப்புகளுக்காக மனிதர் ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். 1991 முதல் நடைபெற்றத் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களின் தொகுதிவாரியான முடிவுகள், கட்சிகளின் பலம், பலவீனம், பெற்ற வோட்டுகள் பற்றிய அனைத்தும் உள்ளடங்கிய டேட்டாபேஸ் அவரது லேப்டாப்பில் வைத்திருக்கிறார். ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாகவே விசிட் அடித்தவர்போல் மக்களின் மனநிலையை ஆணித்தரமாகக் கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லையெனினும், அவரது யோக்கியமான முயற்சி பிரமிக்கவைத்தது. அதைவிட ஷாக்.. . சிலப்பதிகாரம் பற்றிய அவரது நுண்ணிய அறிவு. அதை நிதர்சனமாகக் காணும் வாய்ப்பு நேற்று கிட்டியது.

ரியாத் எழுத்துப்பட்டறையின் கூட்டம் ஒலையாவில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் சாந்தமான தோற்றத்தோடு விளங்கிய பெரிய ஹாலில் அரங்கேறியது. நானும், நாகை. இளங்கோவனும் சென்றிருந்தோம். எங்களுக்குமுன்பே அங்கு வந்திருந்த கல்யாண் முதலில் வரவேற்றார். டாக்டர் மாசிலாமணியும் அவரது துணைவியாரும், எழுத்தாளருமான விஜயலக்ஷ்மி மாசிலாமணியும் வந்திருந்தனர். அப்பாஸ் ஷாஜஹானும் தம்பதி சமேதமாக வந்திருந்தார். ராஜா (நெஸ்மா இண்டெர்னெட்), ஃபக்ருதீன், லக்கி ஷாஜஹான் மற்றும் வெற்றிவேல் (சவுதி ஃபிரான்ஸி வங்கி) என்று குழுமம் களைக்கட்டத்துவங்க, நாங்கள் வட்டமேஜை மாநாடுபோல (மேஜை மட்டும் கிடையாது) சுற்றியிருந்த நாற்காலியில் காஷுவலாக அமர்ந்து கொண்டோம்.

ஆனந்த விகடனில் வரும் எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் (இந்த வாரம் - எழுத்தாளர் ஆதவன் பற்றியது) வாசிப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லக்கி. ஷாஜஹான் வாசிக்க, இடையிடையே கருத்துப் பறிமாற்றம் என யதார்த்தமாகவும் சுவையாகவும் சென்றது.

இதனைத் தொடர்ந்து, நாகை. இளங்கோவனின் சிலம்பு மடல். அவர் வாசிக்க வாசிக்க, 2ஆம் நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகள் கண்முன்னே காட்சிகளாய் விரிந்தது. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமென நம் தலைவன் பாரதி சும்மா சொல்லவில்லை. நாகை. இளங்கோவனின் interpretationsன் நியாயங்கள் எனக்குப் பிடித்தமாதிரி இருந்தது. மன்னனின் சட்டைக்காலரைப் பிடித்துலுக்கும் `தேரா மன்னா...’ பாடலை வாசிக்கும் போது, பள்ளிக்கூட தமிழ் மிஸ்ஸும், யானோ மன்னன், யானே கள்வன் எனப் பாண்டிய மன்னன் வீழும்போது `பூம்புகார்’ சினிமாவும் ஞாபகத்திற்கு வந்தது.

கூட்டம் நிகழ்ந்த இடம் வெற்றிவேல் அவர்கள் வீடு. பொன்னியின் செல்வனில் லயித்துப்போய், ஒரு ஆர்வத்தில் அதில் வரும் அத்தனை ஊர்களுக்கும் (இலங்கையைத் தவிர) போய்வந்தவர். இன்னும் நான் பொன்னியின் செல்வன் பக்கமே போகாதது மீண்டும் உறுத்தியது...

சில விஷயங்கள் இப்படித்தான் ஆகிவிடுகிறது. PAGE 3 படம் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று கடந்த ஒரு வருஷமாகச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன்... ம்... பார்ப்போம்..

Thursday, April 06, 2006

சொல்வதற்கு ஒன்றுமில்லாதபோது........

இங்கிருந்து vacationற்கு, யார் இந்தியா போனாலும், அதுவும் குறிப்பாகக் தென்னிந்தியா சென்றால், அவர்களிடம் குறந்தபட்சம், ஒரு கடிதத்தையாவது (ரொம்ப நெருங்கியவராக இருந்தால் மட்டும், பார்சல்) கையில்கொடுத்து, ordinary post மூலமாக தன் வீட்டிற்கோ அல்லது உறவினர்/நண்பர்களுக்கோ அனுப்பச்சொல்லும் வழக்கம் இங்குள்ள என்போன்ற சில/பலரிடம் பரவலாக இருக்கிறது. இவரும், ரூபாய் ஏதாவது வேண்டுமா என்பார். நாட்டிற்குத்திரும்பும் மகிழ்ச்சியில் மனம் சுளிக்காமல் வாங்கிச் செல்லும் நண்பர், ரூபாய் வாங்க மறுத்துவிடுவார்.

இரண்டு மூன்று வாரமாகியும் கடிதம் போய்சேரவில்லை என்றால்தான் பிரச்சினையே. யாரிடம் கொடுத்தோமோ அவர்கள் மீதும், நம் நாட்டு தாபால் துறை மீதும் அநாவசியமான சந்தேகங்கள் வரும். சுற்றிவளைப்பானேன்...அதுதான் எனக்கு நடந்தது..... ரெண்டு திவஸமா ஞான் வளர அப்செட்! ஒன்னும் பறையாம் பட்டில்லா...........

Sunday, April 02, 2006

PATTIYAL

The rough and tough Arya and a deaf and dumb Bharath are intimate friends and this apart, they are hired killers engaged by middleman VMC Hanifa, who also provides the two with the necessary stratagem for execution and maintains a clandestine relationship unknown even to their lovers, Pooja (the very same girl in Thambi) and Padmapriya (completely different from that of Thavamaai Thavamirunthu).

The drunken and sullen appearance of Arya, with his unshaven face fits very easily into this ruffian role while the calm Bharath steels the show in romantic scenes. However, realistic acting is still a long way to go for the two. Except VMC Haniffa, nobody shows any maturity in acting. Yuvan Shankar Raja could have done better. Anyhow, the song in his own voice Yethaetho...has already turned out to be a hit. However, on the technical side, Nirav Shah and Sreekar Prasad for Camera and Editing respectively, deserve mention.

The director (Vishnuvardhan,the guy who made Arindum Ariyaamalum fairly watchable) lets us down on many fronts. The killings are shown as an amateurish drama lacking vital punch. The stunt scenes lack action while dialogues are deprived of any touch. The fatigued narration gains momentum in the second half only, when Hanifa under pressure, grudgingly agrees to forfeit the two after they complete the task of murdering a big shot at Coimbatore as per the original plan of Hanifa. But by then, the whole thing was lost.

The killers go unnoticed all along. And don't ask what the law enforcing agency was doing all along? In one way, this is a different film... in any normal Tamizh film, you could see Police cops come into sight in the last scene, after the hero accomplishes his task. Here in this movie, the director did not bring a single policeman in the atmosphere till the end!

THANMAATRA

Though the film released during the last leg of 2005, I got the opportunity to see the movie only last week. Director Blessy of Kaazhcha, triumphs again with this meticulous and well crafted film. This time he teams with Mohan Lal... oh, what a great actor he is... showing his class and eminence in each and every frame. For sure he will be endowed with National Award for this towering performance.

Right from the beginning, the film traverses through one's heart. The father-son relationship is as natural as we saw in Thavamai Thavamirunthu. Mohan Lal as a typical middle class Govt employee ambitious to see his plus-two son pursue a career in civil services was unfortunately struck by a devastating Alzheimer's disease. All of a sudden every thing turns nightmare for himself and his loving wife, son and daughter. The family tries very hard to cope up with the inexplicable situation.

The great piece of acting from Mohan Lal, supported aptly by other casts (Meera Vasudevan, Nedumudi Venu, Jagathy, etc.), melodic music of Mohan Sitara, gentle and breezy cinematography, to cap it all, the splendid narration of Blessy all carry the film to greater heights - A must-watch movie!

I believe, the commercial success of film will really place Malayalam cinema back in its right track.

Labels:

CHITHIRAM PAESUTHADI

Hats off to Director Myshkin (originally Raja; Prince Myshkin of Dostoevsky’s Idiot, impressed him so much that resulted in his change of name) for Chithiram Paesuthadi, his debut venture, aptly supported by all the cast and crew. The title itself, a cream slice from an yesteryear melody Chithiram paesuthadi, yen Chinthai mayanguthadi…(sung by T.M.S. in Sabash Meena), throws a picture of a love story unfolding to come.

After working in several projects on love – Kadhal Daesam, Kadhalar Dhinam, Kadhal Virus (all under Director Kathir), yet Myshkin does not seem to be carried away by love-crazy themes. Here he does not harp on love alone, he tries to offer something beyond that, though not new.

The story is all about the love between a henchman (Naren) to a city Dada and a compassionate and socially conscious middle class girl (Bhavana), who brings about a change of heart in the former and also convinces to get the nod from her father for the marriage. But in the turn of events, the romantic climate evaporates and a revulsion state sets in as Bhavana doubts the integrity of the Naren and further holds him responsible for the suicide of her father. The utterly dejected Naren has no other go, but to return to the underworld. Incidentally, Bhavana’s uncle, her only guardian, tries strenuously to offer her fresh lease of life by arranging marriage with one Bank personnel. At this point, the Dada comes into picture proposing her for his son and threatens to sabotage the engagement arranged by her uncle. He assigns his henchman Naren, to his utter dismay, the task to ensure that his son gets Bhavana by hook or crook. Kidnaps, stunt all follow with tense moments….whether Naren and Bhavan join is the climax.

An impressive debut for both Sunil Kumar (in the titles it is shown as Naren) and Bhavana. Thandapani lacks the ferocity of the present day Dadas (why the director preferred Pithamagan Mahadevan to do a soft role instead, I don’t understand). All the new faces we see in the movie are very natural, kudos to Mishkin for not depending on a Vivek or Vadivelu. However, the occasional comedy of one of the accomplices of Naren never fails to bring laughter. Yet, Bhavana simply outsmarts the rest with her splendid performance throughout the movie, expressing appropriately the emotions, be it love, affection or hate. Surely this will fetch her good number of roles in coming days in Tamil cinema.

Also another worth mentioning name is Music Director Sundar C. Babu, also a debutant. His music throughout the movie was remarkable. Apart from the theme music, the duet `Idam porul paarthu, idhyaththai maathu…’ rendered by Karthik-Sujatha and ‘Pattam Puchi….’ Timmy, Ranjit with chorus are the best. Also, Gaana Ulaganathan makes his mark in the scene with his song Vazha meenukkum… fitting the scene.

Bottom line: A decent film, neat narration, minimized violence, fabulous Bhavana and gentle music, worthwhile to watch.


KOVAI BROTHERS

Oh God! I am sorry. Oh Periyar! `Lollu’ of Sathyaraj is unbearable. And his son Sibiraj has to learn from somewhere what acting is all about, prior to appearing before the camera. Sakthi Chidambaram is directly responsible for this rotten work (hope u will not ask me why i saw this film?)

Labels:

ரியாத் வந்த பின்பு, குறிப்பிட்டுச் சொல்லும்படியான இரண்டு வரவேற்கத்தகுந்த விஷயங்கள் - அடிக்கடி மலையாளத்தில் சம்சாரிக்க வாய்ப்பது மற்றும் சகட்டுமேனிக்கு சினிமா பார்க்க நேர்வது (தமிழ், மலையாளம், ஆங்கிலம்). அங்கனம் சமீபத்தில் பார்த்த படங்கள் ...

THAMBI

Madhavan has come a long way since Alaypayuthey. We have scene the actor in Anbe Sivam proving that he is no more a second fiddle to Kamal and in fact, Maddy scored some points more than the latter in many a scene and in Manirathnam’s Ayutha Yezhuththu, Maddy did a baddie risking his hero image.

Over the years his performance has remarkably increased though this has not reflected in his popular appeal. Unlike Run, where he combined soft and robust modes effectively, here in Thambi he has got to do a hardliner devoid of any romance, leave alone the histrionics in dream scenes.

The story is all about a common man who accidentally gets caught in a tight spot while trying to help a victim butchered by city’s goondas, and then volunteering to stand as witness in court against the killer - all leading to the destruction of his family. The only difference in the story line is the hero, instead of taking the line of vengeance, turns into a crusader against violence. Yet, a lot of stunts were enacted for the gung ho Maddy (but how come with his single stroke, the villains and goondas are falling to ground) with a justification that even to say `silence’ one needs to make a loud cry!

After Majaa, Biju Menon once again confirms he is not suited for villainy. The usual vendetta, hero-crazy heroine (Pooja), monotonous Vadivelu all leaves Maddy to plough a lonely furrow to make the film watchable. The only other guy worth enough to be credited is Ilavarasu, as one of the henchmen of Biju Menon, makes passing remarks that are natural and quite enjoyable. However, Vidhyasaagar springs beautiful melodies in a couple of duets, Sudum Nilavu…(Unnikrishnan and Harini) and Summan kidantha…...(Karthik and Kalyani) while the another number with a realistic lyric, Yennamma Devi Jakkamma…...(Karthik, Manicka Vinayagam and Chorus) tops all.


Aanantha Vikatan has rightly given 43 marks while kumudan's review is also just.


KALVANIN KAADHALI

Lesser said about the movie is better. The introductory scene of SJSurya is a clear depiction of vulgarity, not only challenging the courts, but also all civilized norms (is this boorish trend in Tamil cinema come into stay?). I deliberately avoid mentioning the name of the director to deprive him of any publicity.

Vivek’s comedy fails to click. Nayanthara makes an impact in the song and dance sequences, thanks to Yuvan Shankar Raja’s splendid composition for Tajmahal Oviyakkaadha….. (Vijay Yesudass and Mahdumitha) and Yeno Kannga….. (Yuvan Shankarraja himself with the present day nightingale Saadhana Sargam).

கணேசன் எழுதிய கவிதை

எதிர் வீட்டுக் கொடியில்
காய்தலுக்காகக் காத்திருந்தது
நேற்று அவள் தரித்திருந்த
நீல நிற சுரிதார்.
சட்டென நினைவுக்கு வந்தவனாய்
என் வீட்டு மாடிக்கு ஓடினேன்
ஈரம் சொட்டச் சொட்ட இருந்த
என் பாண்ட் பாக்கெட்டினுள்
துழாவியெடுத்தேன்
கணேசன் கொடுத்தக் கடிதத்தை.
கன்னாபின்னாவென கசங்கிப்போயிருந்த காகிதம்
எழுத்துக்களின் கரைதலால் நீலத்திற்கு மாறியிருந்தது
இருந்தும் எனக்கு நிம்மதியைத் தந்தது
அசலான கவிதை என்னுள்
பத்திரமாய் இருப்பது.


****

கவிதைக்கான என் முதல் முயற்சி இதுவே. பிள்ளையார் சுழி போல இருக்கடுமே என்று `கணேசன்' என்று துவங்கினேன்.
எழுதப்பட்டக்காலம் - 1991-92, மீனம்பாக்கம் (சென்னை) ஏ. எம். ஜெயின் கல்லூரியில் மூன்றாமாண்டு கணிதம் பயிலும்போது.
காரணமாய் இருந்தவர்க்கள், கல்லூரி நண்பர்கள் இருவர் - கல்யாணராமன் மற்றும் முத்துக்குமாரசாமி. வாசித்துவிட்டு அவர்கள் சொன்ன கருத்துக்கள் நினைவில்லை. கணையாழிக்காகத்தான் எழுதப்பட்டாலும், அனுப்பவில்லை.

1993-94 வாக்கில், என் கவிதையை வேண்டி, சந்திக்கும்போதெல்லம் மன்றாடிக்கொண்டிருந்தார், தீவிர இலக்கியச் சிற்றிதழ் நடத்திய நண்பர் ஒருவர். பிரசுரத்திற்காக இந்தக்கவிதையைக் கொடுத்தேன். அது வெளிவந்ததோ இல்லையோ, அதன்பிறகு, அவர் கவிதையைப் பற்றி எதுவும் என்னோடு பேசுவதுமில்லை, எந்த நச்சரிப்புகளும் இல்லை.

பின்னர், திருவையாறு பாரதி இயக்கத்தின் ஆண்டு மலரில் வெளியிடுவதற்காக நண்பர் பிரேமசாயி வாங்கிச் சென்றார். வெளியானதாக தெரியவில்லை.

1996ல், தஞ்சாவூரில் சாமிநாதன் மற்றும் அவர் சகோதரர் சுந்தரராமன் துணையுடன் நான் நடத்திய 'பாற்கடல்' என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையில்தான் முதன்முதலாக வெளியிட்டேன். அதேவருடம், கல்யாணமானவுடன் பத்திரமாய் மறைக்கவும் தவறவில்லை.


ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜூலை மாத திசைகள் இணைய இதழில் வெளியானது.

http://www.thisaigal.com/july05/poemvenketeshvaradarajanUNI.html

கவிதை இருக்கட்டும் ஒரு புறம்,
அந்த நீலநிற சுரிதாரின் சொந்தக்காரி, அவளை `சைட்' அடிப்பதற்காகவே தினமும் என் வீட்டிற்கு வரும் என் பால்யகால நண்பன், கல்லூரிகால கல்யாண்ராமன், முத்துக்குமாரசாமி, தஞ்சை நண்பர்கள் சாமிநாதன், சுந்தரராமன், திருவையாறு பிரேமசாயி, இவர்களெல்லோரும்தான் மனதில் இப்போது flash ஆகிறார்கள்...