பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Saturday, January 26, 2008

வந்தே மாதரம் என்போம்! குடியரசுதின வாழ்த்துக்கள்!




பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய இந்த வந்தே மாதரம் (வங்காள மொழியில்):

வந்தே மாதரம்!
சுஜலாம் சுபலாம்
மலயஜ சீதலாம்
ஷஸ்யஷியாமளாம்
மாதரம்
வந்தே மாதரம்

ஷுப்ரஜ்யோத்ஸன
புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல
ஷோபினிம்
சுஹாசினிம் சுமதுர
பாஷினிம்
சுகதாம் வரதாம்
மாதரம்
வந்தே மாதரம்

பாடலை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் முதலில் இவ்வாறு மொழிபெயர்த்தார்:

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!


பின்னர், பாடலுக்கு மேலும் சில சந்தங்கள் சேர்த்து, இரண்டாவது முறையாக மொழிபெயர்த்தார்:

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)

கப்பலோட்டிய தமிழன் படத்தில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்போம் பாடலைக்கேட்க இங்கே சொடுக்குங்கள்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?




Labels:

Wednesday, January 23, 2008

நடிகை நாடகம் பார்க்கிறாள் - எனது அனுபவப் பகிர்வு

இன்று காலை அலுவலகம் வந்தவுடன், வலையுலகம் வலைப்பதிவில் படித்த விஷயம் என்னைத் தூண்ட, எனது மதிய உணவு நேரத்தில், மனம் போன போக்கில் எழுத்தப்பட்ட பதிவு இது:

***

ஜெயகாந்தனது 'நடிகை நாடகம் பார்கிறாள்' மகத்தானதொரு படைப்பு. ஜெயகாந்தனையோ, பீம்சிங் பற்றியோ எதுவும் அறிந்திராத அப்போது எனக்கு வயது 10 இருக்கும். இருந்தும், அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டிய ஆர்வத்திற்குக் காரணம், அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி நான் படித்த பள்ளியில் படமாக்கப்பட்டது என்பதுவேயன்றி வேறொன்றும் இல்லை.

கருப்பு வெள்ளை படம் (ஆமாம், கலர்ல எடுத்திருந்தா மட்டும் என்னவாம், அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் கருப்பு வெள்ளை டிவிதானே) என்பதாலும் சுவாரஸ்யம் குறைவாகவே இருந்தது. ஸ்ரீகாந்த்-லக்ஷ்மி நடித்த படம் என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன்.

லக்ஷ்மி நாடக நடிகை. ஸ்ரீகாந்த் பத்திரிக்கையாளன்.

படம் துவங்கிய ஒரு சில மணித்துளிகளிலேயே எங்கள் பள்ளி ஆடிட்டோரியத்தைக் காண்பித்தார்களா, ஒரே விசில்தான் என் மனசுக்குள்.
காட்சி இதுதான் - நாடகம் துவங்கப்போகும் சில நிமிடங்களுக்கு முன்னர், மேடைக்குப் பக்கவாட்டிலிருக்கும் மேக்-அப் அறையில் நாடக நடிகை லக்ஷ்மி, கைக்காண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டே மேக்-அப் செய்துகொண்டு நாடகத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருப்பார்; மேடைக்குச் சற்று முன்பாக உள்ள பார்வையாளர் வரிசையின் முதல் வரிசையில் நாடக நிர்வாகி ஒய்.ஜி.பார்த்தசாரதியோடு, பத்திரிகை விமர்சகர் ஸ்ரீகாந்த் அவருக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலி குறித்த ஒரு சர்சையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். அவர்களது அந்த வாக்குவாத ஓசை லக்ஷ்மியின் காதில்விழ, மேக்-அப் அறையிலிருந்த ஒரு சிறிய கண்ணாடி ஜன்னல்வழியே ஒரு கணம் எட்டிப்பார்ப்பார். பின்னர் மறுபடி தன் மேக்-அப் வேலையில் மூழ்குவார். ஸ்ரீகாந்தை மீண்டும் பார்க்கத் தூண்டும் அவரது மனம். என்றாலும் நாடகம் இன்னும் சில கணங்களில் துவங்கப்போகிறதே.. அதனால், ஸ்ரீகாந்தைக் காணத்தூண்டும் உணர்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு நடிக்கத் தயாராவாள். ஸ்ரீகாந்தை ஒரு வழியாக சமாதானப்படுத்திய ஒய்.ஜி.பார்த்தசாரதி, அவரை லக்ஷ்மியிடம் சென்று அறிமுகப்படுத்துவார். ஸ்ரீகாந்தைப் பார்த்த மாத்திரத்திலேயே லக்ஷ்மி தன் மனதைப் பரிகொடுத்து காதலில் விழுந்துவிட்டாரா என்றெல்லாம் அன்று யோசிக்கத்தெரியாத பருவம் எனக்கு.

ஆனால், அதே படத்தை மீண்டும் ஒரு பத்து வருடங்கள் கழித்து எனது கல்லூரிக் காலத்தில் பார்த்தபோது நட்பு, காதல், திருமணம் போன்றவற்றைப் பற்றிய மிக நுணுக்கமான விஷயங்கள் புலப்பட்டது. என்னதான் ஒரு அருமையான திரைக்கதையின் துணைகொண்டு மனித உணர்வுகளின் நுணுக்கங்களை படமாக்கினாலும் அது சென்று சேர்வதென்னவோ பொறுமைமிக்க ரசிகர்களிடம் மட்டுமே என்பதையும் புரிந்துகொண்டேன்.

'பொறுமை' தான் தலாய பண்பு, பல விஷயங்களை அறிந்தும் தெளிந்தும் கொள்வதற்கு உதவியாய் இருப்பதும் அதுவே. இந்தப் பொறுமை இல்லாததால்தான் உறவுகளின் உன்னதங்களையும் மனம் அறிவதில்லை, உறவுமுறிதல் பற்றிய கவலைகளைப் பற்றியும் மனம் சிந்திப்பதில்லை.

ஒரு சினிமா உங்களுக்குள் ஏதாவது கருத்தைத் தோற்றுவித்ததா என்று கேட்டால் சில படங்களின் பெயரை நீங்கள் சொல்லலாம், குறிப்பாக சினிமாவை நீங்கள் வெறும் கேளிக்கைக்காக மட்டுமே பார்க்காத பார்வையாளராக இருந்தால்.

'நாங்கள் என்றும் நல்ல நண்பர்களாக இருக்க விரும்புகிறோம்; திருமண வாழ்க்கையில் அது சாத்தியமில்லாததால் விவாகரத்து கோருகிறோம்' என்று ஸ்ரீகாந்தும், லக்ஷ்மியும் வக்கீலை அணுகும் காட்சி, 'திருமணம் தேவையா' என்ற கருத்தினை என் மனதில் தோற்றுவித்தது. என்றாலும், வெகுவிரைவிலேயே திருமணமும் செய்துகொண்டேன் என்பது, என்னுள் ஓடும் சிந்தனைக்கும் அதனைச் செயல்படுத்தும் எனது திறனுக்கும் இடையேயான இடைவெளிக்கான சான்று.

***

அன்பு, பாசம், காதல், நட்பு - எந்த உறவாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர் மத்தியில் நிகழும் சிறிய கருத்துவேறுபாடு என்பது இருவருக்கு மத்தியில் விவாதப்பொருளாகிப் போனால் (point of discussion) பெரிய மனச்சிக்கலாக உருவெடுத்து பரஸ்பர அவநம்பிக்கையைத் தோற்றுவித்து உறவைத் துண்டித்துக்கொள்ளவும் தயங்காத நிலைக்குத் தள்ளிவிடுகிறது. சாமியார்கள் முதல் சாமானியன் வரை இந்த difference of opinion என்பது ஒரு கட்டத்தில் பரஸ்பர காழ்ப்புணர்ச்சி (mutual hatred), வசைபாடுதல் என்று என்னமோ ஜென்ம விரோதிகளைப் போல மோதிக்கொள்ளும் அளவிற்கு போய்விடுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினுள் வாகனத்தை ஓட்டி, அனைத்து சாலை விதிகளையும் அனுசரித்து சமயோசித புத்தியோடு (presence of mind) சென்றாலும் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துவிடுவதுபோல சில உறவுமுறிவுகள் விபத்துக்களாய் நேர்ந்துவிடுகிறது. அங்கனம் முறிந்த உறவுகள், விடுபட்டுப்போன தொடர்புகள் மீண்டும் கைகூட வாய்ப்புகள் உள்ளதா? உடைந்து சிதறிய கண்ணாடிக் கோப்பையின் துண்டுகளை மீண்டும் சேகரித்து ஒட்டிவைத்தாலும் விகாரமாய்த் தெரியும் விரிசல்கள் எனக்குச் சொல்வதெல்லாம் உறவின் நினைவுகளைப் போல முறிவின் சுவடுகளும் அழியாதவை என்பதே.

கருத்துவேறுபாடு என்பது தவிர்க்க முடியாததாயினும், அதுபற்றிய பேச்சு விவாதமாக உருவெடுத்த தருணம் தவிர்க்கப்பட்டிருப்பின் இந்த உறவு முறிவுகள் நிகழ்ந்திருக்காதோ என்னவோ.

சின்னச் சின்ன விஷயங்கள்தான் பெரிய உறவுகளுக்கு வேட்டுவைக்கிறது. இதற்கெல்லாம் பெரும்பாலும் நமது 'தான்' என்ற கர்வமமும் (ego), அது தொடர்பான விருப்பு வெறுப்புகள் மற்றும் எதிர்ப்பார்புகளும் காரணமாக அமைந்துவிடுகிறது. ஒருவரைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் சூழலில், எதிர்ப்பார்புகளுக்கு கொஞ்சம் முரணாக இருந்தாலும், தடாலடியாக அவரைப் பற்றிய ஒரு நேர்முரணான கருத்துக்குத் தாவி (jumping to the opposite conclusion), அதனாலேயே பல உறவுகள் முறிகின்றன. எதிர்பார்புகளற்ற உறவுகளைப் பாருங்கள், ஹை-பை என்று எப்போதும் போல் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது- அவர்களோடு ஓஹோ என்று ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, அதனால் என்றும் அவர்களிடமிருந்து உறவு-முறிவு (break of relationship) பற்றிய சாத்தியத்திற்கு இடமில்லை.

தான் நினைப்பதுதான் சரி என்ற கண்ணோட்டம், 'உனக்கென்ன தெரியும்?', 'உன்னை விட எனக்கு இதில் அதிக அனுபவம் இருக்கு', 'உன் வயசு என்ன, என் வயசு என்ன?' என்றெல்லாம் அடுத்தவர் மீது கருத்து ஆக்கிரமிப்பு நடத்த முற்படும் தருணங்களில் நட்பின் உறவு (bondage of friendship) மெல்ல அறுகிறதை சம்பந்தப்பட்ட நபர்கள் உணரத் தவறுகிறார்கள். நட்பின் உறவு என்பதன் தேவையை உணர்ந்து, இரண்டு கை தட்டினால் தானே ஓசை என்று எல்லாவற்றையும் பொருத்துக்கொண்டு போய்விடுவதேகூட சாலச் சிறந்ததோ என்று கூடத் தோன்றுகிறது... ஆனால் அது சுத்த பிற்போக்குத்தனமாயிற்றே... அதைத்த்தானே நமது பெண்குலம், காலம்காலமாக செய்துகொண்டு வருகிறது.
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் வெறும் வெளித்தோற்றத்தினால் அமைந்த சமாதானமானது பலவகையில், திருமண வாழ்கைக்குப் பொருத்தமாகவே இருந்து வந்திருக்கிறது (இப்போதும் இருக்கிறது).

கடந்தமுறை விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தபோது, நீண்டகாலம் முன்னர் காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடி, அப்போது ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதேயில்லை என்ற நிலையிலிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. 'நேற்றுவரை நல்லாத்தானே இருந்தீர்கள், இன்று என்ன ஆச்சு உங்களுக்குள்? நீயாவது சமாதானமாப் போகலாமேமா' என்று மூன்றாவது நபர் யாராவது குறுக்கிட்டு உபதேசித்தால் (அல்லாது ஆலோசித்தால்), 'இல்லை, இல்லை, என்னிக்குமே அவன் அப்படித்தான், குழந்தைக்காகத்தான் நான் இத்தனை நாளும் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தேன்' என்கிறாள். அவனிடம் கேட்டால், அகிரா குரோசவாவின் ரஷோமான் போல (அதான், நம்ப விருமாண்டி திரைக்கதை ஸ்டைலில்) அவன் பங்கிற்கு ஒரு கதையை சொல்கிறான். அதுவரை அவர்கள் காத்து வந்தது பொறுமையா, சகிப்புத்தன்மையா... எதுவாக இருந்தாலும் அதிலும் ஒரு சுயநலத்தேவையும் இல்லாமல் இல்லை, இல்லையா? ஆனால், அந்த சுயநலத்தில் என்ன தவறு இருக்கிறது, ஒவ்வொன்றினையும் இது உண்மையான அன்பா, காதலா, நட்பா என்ற ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால், எந்த உறவுமே நீடிக்கப்போவதில்லை.

***

Labels:

Wednesday, January 09, 2008

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



தென் தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டும், மண்ணின் மணம் கமழும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வருத்தத்திற்குரியது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் bull fightஐ விட இதிலொன்று அப்படி ஒரு கொடுமை எல்லாம் மஞ்சுவிரட்டு (chasing the bull) என்றும் அழைக்கப்படும் இந்த விளளயாட்டில் நடந்துவிடுவதில்லை. இந்த விளையாட்டில் பங்கு பெருபவர்களுக்கும், வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஆபத்து நிகழாமல் இருப்பதுதான் முக்கியம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த ஜல்லிக்கட்டு எப்போதும் போல் தொடர்ந்து நடைபெறுவதையே நானும் விரும்புகிறேன்.
ஊச்சப்பன் அவர்கள் எடுத்த இது போன்ற அருமையான புகைப்படங்கள் இங்கே நிறைய காணக்கிடைகின்றன.

Labels: ,

என்னைக் கவர்ந்த லோகோக்கள் (Logos)

சில லோகோக்கள் (உங்கள் பார்வைக்கு):அமேஸான் நிறுவனத்தின் இந்த லோகோ என்ன சொல்கிறது - A முதல் Z வரை; தவிர கீழே ஒரு புன்னகை.EIGHT - ஒவ்வொரு எழுத்தைக் குறிக்கவும் '8' என்ற எண்ணின் ஒரு பகுதிதான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையின் ஃபாமிலீஸ் மற்றும் மேரேஜ் இதழ்கள்
ஃபெட் எக்ஸ்
ஐ.பி.எம். நிறுவனம்

Labels: ,

Sunday, January 06, 2008

இந்திய வெற்றி - ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட்






முன்குறிப்பு: சில மணித்துளிகளுக்கு முன்பு நிறைவடைந்த சிட்னி டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை, ஆட்டத்தின் போக்கினை ஆட்டக்காரர்களைவிட நடுவர்கள் (Umpires) அதிகமாக முடிவு செய்தார்களென்றே எனக்குப்படுகிறது. அந்தவகையில், அம்பையர்கள் ஸ்டீவ் பக்னரும், மார்க் பென்ஸனையும் சேர்த்து ஆஸி அணிக்குப் பதிமூன்று ஆட்ட்டக்காரர்கள் எனலாம்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸிற்கு மூன்று வாழ்வுகள் முதல் இன்னிங்க்ஸில் (இதில் சைமண்ட்ஸே ஒப்புக்கொள்கிறார் 30 ரன்னில் அவர் அவுட் என்று); இரண்டாவதில், மைக்கேல் ஹஸ்ஸி; இந்தியா மட்டையுடன் களமிறங்கியபோதோ, அம்பையரிங் இன்னும் மோசம். வாசிம் ஜாஃபர் முதல் இன்னிங்ஸில் அவுட் கொடுக்கப்பட்டது ஒரு No Ballலிலாம்! . இரண்டாவது இன்னிங்ஸில், ராஹுல் திராவிட்டின் மட்டைக்கும் பந்துக்கும் ஒரு மைல் இடைவெளி இருந்தபோது caught behind out கொடுத்தார் ஸ்டீவ் பக்னர் என்றால், மார்க் பென்ஸனும் தன் பங்கிற்கு கங்கூலியை போட்டுத் தள்ளினார், என்னமோ என்கவுண்டரில் போடுவதுபோல. டிவி ரிப்ளேக்கள் தொடர்ந்து சொல்கிறது மைக்கேல் க்ளார்க் கேட்சை ஒழுங்காகப் பிடிக்கவில்லை என்று. எதுவாக இருந்தாலும், இந்தப் பதிவின் நோக்கம் அம்பையரிங்கைக் குறை கூறுவதன்று. அம்பயரிங் மட்டும் நடுநிலைமைத் தன்மையோடு இருந்திருந்தால் இந்தப் போட்டியும் கீழ்காணும் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

ஆஸ்திரேலியாவ்விற்கெதிரான இந்திய வெற்றிகள்


வான்கடே ஸ்டேடியம், மும்பை - நவம்பர் 2004 (click for scores)


முதல் நாளே, முதல் இன்னிங்ஸில்104 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, கற்பனை செய்து கூடப் பார்த்திருக்காது இந்தப் போட்டியில் வெல்லும் என்று. இரு அணிகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்த பந்தையத்தில் இந்திய வெற்றியைச் சாத்தியப்படுத்தியவர் ஹர்பஜன் சிங்தான் (5/29); 93 ரன்களுக்கு ஆஸியை சுருட்டி 13 ரன்களில் இந்தியா வென்றது. கும்ளே, ஹர்பஜன், முரளி கார்த்திக் என மூன்று சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கிய இந்திய அணி, ஆஸியியை முதல் இன்னிங்ஸில் குறைவான ரன்னுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. முதல் இன்னிங்ஸில் திராவிட் ஆட்டமிழக்காமல் 31 ரன்களிலும், இரண்டாவதில் லட்சுமண் (69) டெண்டுல்கர் (55) ஆகியோரின் ரன் சேகரிப்பும் பயனுள்ள பங்களிப்புகள்.

அடிலைட் ஓவல் - டிசம்பர் 2003 (click for scores)

ஆஸியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 556; அதில், ரிக்கி பாண்டிங் 242; எனினும் அசராத இந்தியா திராவிட் (233) லட்சுமண் (148) துணையில் 523 ரன்கள் குவித்தது. அப்புறம் அஜித் அகர்கர் வேற... என்னிக்கும் இல்லாத அசத்தலான பந்துவீச்சா.. .கேட்கவே வேண்டாம்...6 for 41!


சேப்பாக்கம், சென்னை - மார்ச்சு 2001 (click for scores)

மேத்யு ஹேடன் 203
டெண்டுல்க்கர் 126
ஹர்பஜன் சிங்கின் அபாரமான பந்து வீச்சு (7/133 மற்றும் 8/84)
முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் எடுத்தபோதும் இறுதி வரை பரபரப்பாகப் போய், இரண்டு விக்கெட்டில் இந்தியா வெற்றி.

ஈடன் காடன்ஸ், கொல்கத்தா - மார்ச்சு 2001 (click for scores)

ஆஸியின் 445க்கு இந்தியா முதல் இன்னின்ஸில் 171 ரன்களே எடுக்கமுடிந்தது. Follow-onல் மீண்டும் களமிறங்கிய இந்திய அணி குவித்ததோ 600+ ரன்கள்; லட்சுமண் (281) - திராவிட் (181) ஜோடியின் அபாரமான பார்ட்னர்ஷிப்பில் 381 குவிந்தது ரன்.

சேப்பாக்கம், சென்னை - மார்சு 1998 (click for scores)
சச்சின் டெண்டுல்கரின் 155...!

ஃபெரோஸ் ஷா கோட்லா, புதுடெல்லி - அக்டோபர் 1996 (click for scores)

நயன் மோங்கியாவின் 152 ரன்கள்; அவர் வாழ்கையிலேயே மறக்க முடியாத இன்னிங்க்ஸ்... பலருக்கோ, நம்பமுடியாத ஒரு உண்மை!

ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா - மார்ச்சு 1998 (click for scores)

ஜவாகல் ஸ்ரீநாத் ஏற்படுத்திக்கொடுத்த அபாரமான துவக்கம், ஆரம்பம் முதலே இந்தியாவிற்கு ஏறுமுகம்தான்; நமது மட்டைக்காரர்கள் களமிறங்கியபோதோ, ரன்கள் மளமள வென்று வந்து கொண்டே இருந்தது; 663 ரன்கள் ஸ்கோரில், 5 ஆட்டக்காரர்கள் அரைசதம் அடிக்க அசாருதீன் ஒருவரால் மட்டுமே சதம் அடிக்க முடிந்தது.

இந்தப் போட்டிகள் எல்லாவற்றிலுமே இரண்டு ஆட்டக்காரர்கள் என் கவனத்திற்கு வருகிறார்கள் - லட்சுமண் மற்றும கும்ப்ளே; பெரும்பான்மையான போட்டிகளில் இந்திய வெற்றிக்கு அவர்கள் நல்ல வகையில் பங்களித்துள்ளதாக அறிந்துகொள்கிறேன்.

சேப்பாக்கம், சென்னை - செப்டம்பர் 1986 (click for scores)

இந்த பட்டியலில் இதை நான் சேர்த்ததற்குக் காரணம், ஒரு சாதாரண draw ஆகக்கூடிய போட்டியை ஒரு challengeஆக எடுத்துக்கொண்டு விளையாடிய இந்திய அணியின் spirited chaseஐ என்னால் மறக்கவேமுடியாது. உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாது இயன்ற வரை கிரிஸில் தனது தலைவன் ஆலன் பார்டருடன் விளையாடி 200க்கும் மேல் ரன்களைக் குவித்த டீன் ஜோன்ஸ் அனைவரது மனதையும் தன் விடாமுயற்சியல் கொள்ளை கொண்டார் என்றால் அது மிகையாகாது. அதே விடாமுயற்சி இரு அணிகளில் ஆட்டத்திலும் கடைசி நாள் இறுதிகட்ட ஆட்டம் வரை தொடர்ந்தது. நான்காவது இன்னிங்ஸில் 340+ ஓட்டங்களை chase செய்ய முடிவு செய்ததே பெரிய விஷயம்.


மெல்பர்ன் - பிப்ரவரி 1981 (click for scores)

முதல் இன்னிங்க்ஸில் சதமடித்த குண்டப்பா ராவ் விஷ்வநாத், ஆஸ்திரேலிய வீரர்களை அவ்வளவு எளிதில் ரன் எடுக்க விடமுடியாதபடி கச்சிதமாகப் பந்துவீசிய திலீப் தோஷி, இந்தியாவை மீண்டும் ஆட்டத்திற்குக் கொண்டுவந்த இரண்டாவது இன்னிங்க்ஸின் சுனில் கவாஸ்கர்-சேத்தன் சௌஹான் ஜோடியின் 165 ரன் அபாரமான பார்ட்னர்ஷிப் - இவை எல்லாவற்றையும் விட கடைசிநாளில், painkillerகளை உட்கொண்டு ஆடுகளத்தில் இறங்கி நம் மானத்ததக் காத்த கபில் தேவின் magic spellல்லால் வந்த இந்திய வெற்றி எல்லாமே மறக்க முடியாத வெற்றியாக்கிவிட்டது. எனினும், இந்த டெஸ்டின் மிகவும் மறக்க முடியாத வரலாற்றுச் சம்பவம் என்னவென்றால், அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் செய்த walkout சம்பவம்தான். ஒரு கோபத்தில்/ஆத்திரத்தில், ஆஸ்திரேலியாவிற்கு இந்தப் போட்டியை forfeit செய்வதாக அவர் அறிவித்தபோது, அணியின் மேலாளரே களமிறங்கிவந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். சுனில் கவாஸ்கர் இந்த சம்பவத்திற்கு பின்னாட்களில் அதிக வருத்தம் தெரிவித்தார். The following is quoted from his Idols... "That (the walkout) was the most regrettable incidents of my life. Whatever may be the provocation and whatever the reason, there was no justification for my action and I realize now that I did not behave the way a captain and sportsman should..." இப்படி பகிரங்கமாக தனது தவறை ஒப்புக்கொண்ட சுனில் கவாஸ்கர் அவர்களை என் உள்ளம் கவர்ந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைபடுகிறேன். மேலும் சில இந்திய வெற்றிகள்

க்ரீன் பார்க், கான்பூர் - அக்டோபர் 1979

வான்கடே, மும்பை - அக்டோபர் 1979

சிட்னி - ஜனவரி, 1978

மெல்பர்ன் - ஜனவரி 1978

புதுடெல்லி - டிசம்பர் 1969

ப்ரபோர்ன் ஸ்டேடியம், மும்பை - அக்டோபர் 1964

க்ரீன் பார்க், கான்பூர் - டிசம்பர் 1959


***

பின்குறிப்பு: இந்தப் பதிவைப்போடத் துவங்கும் சமயத்தில் என்னவோ, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத்தான் இருந்தது; அது நேற்றைய கதை! இன்று காலையோ, 'Publish Post' பொத்தானை அமுக்க ஆயத்தமான தருவாயில்கூட, இந்தத் டெஸ்ட் டிராவை நோக்கி நகர்வதாகவே நினைத்தேன்; எனினும், இறுதி வரை காத்திருக்க முடிவு செய்துவிட்டுப் பார்த்தால்... சே-ன்னு ஆயிடுச்சு! யாரிந்த மைக்கேல் க்ளார்க்...? இந்த மேட்சில் உருப்படியாக ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை (முதல் இன்னிங்ஸில் 1, இரண்டாவதில் டக்!)... ஆனால், penultimate overல் இந்தியாவின் கதையையே முடித்துவிட்டாரே! ஒரு ஓவரில் எல்லாம் கனவாகப் போய்விட்டது. சரி, ஒரு ஆறுதலாகப் போகட்டும் என்றே, இதை நான் பதித்துத் தொலைக்கிறேன். சொல்லமறந்துட்டேனெ... இது என் 50ஆவது பதிவு!

Labels:

Wednesday, January 02, 2008

Happy New Year வாழ்த்து பாடல் in Tamil film

Caution: This is an English blog; but one needs to know Tamil to read it.

Hi Everybody,

Wish You Happy New Yearrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.

The song from Sakalakalavallavan that I heard yesterday still does some ரீங்காரம் in my ears..

ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பீ நியுயியர்
ஹே... ஏ... ஏ... ஏ...

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ



Glitter Graphics - GlitterLive.com


Not only the greetings message of religious heads and our political leaders we see as routines on New Year Day, but also the telecast/broadcast of this song from Sakalakalavallavan have also become a regular feature on New Year Day in most of the Tamil Channels/FMs. Ilamai ithO ithO Inimai ithO ithO… is simply a rocking song that rocks today's youth too. And I wont be surprised to see a remix of that song in any of the upcoming tamil movie, given the success these remixes generates in Tamil film song lovers nowadays, to name a few –

'என்கேயும், எப்போது சங்கீதம் சந்தோஷம்...' (Polladavan; Stg-Dhanush)
'வெத்தலையப் போட்டேன்டீ...' (Billa; Stg: Ajith)
பொன்மகள் வந்தாள்' (Azhagiya Thamizh magan; Stg-Vijay)
'என்னாச மைதிலியே என்னை நீ காதலியே' (Manmadhan; Stg-Simbu)
'ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா...' (Malaikkottai; Stg-Vishal)
'என்னடி முனியம்மா' (Vaathiyar; Stg-Arjun)

Though the song is totally based on the strength of Kamal's image, the success of இளமை இதோ இதோ... should be attributed to Ilayaraja, SPB and AVM too. Almost around the same time another new year song that was also quite popular for some years was that TMS sung 'நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க ஹேப்பி ந்யூ இயர்' from the film SANGILI (a Sivaji starrer, but more notably the debut film for Prabhu). சிவாஜி கோட்-சூட்டில் தொந்தியும் தொப்பையுமாக ஆடும் பாடல்.. M.N.நம்பியர் தான் வில்லன். 'NO17' தலைகீழே பார்த்தால் LION என்று தெரியுமே... நியாபகம் வருதா...? I remember DD's Oliyum OLiyum that used to telecast host of other New Year songs such as the one from the K.Balachander's film Nootrukku Nooru, 'உன்னை வாழ்த்திப்பாடுகிறேன், நீ வரவேண்டும்...' - அது ஜிகினா உடையில் ராஜஸ்ரீ என்று நினைக்கிறேன்; then we also had 'தங்கமகள்... துள்ளி வந்தாள்......புத்தாண்டு வாழ்த்துக்கள்ள்ள், எல்லோரும் பாடுங்கள்' (அதுக்குமேல lyrics சுத்தமா நியாபத்திற்கு வரலை) from one Sivaji-Prabu-Ambika starrer (படம்? Theerpu or Thiruppam?) I am also reminded about another new year song from the film Paalaivanacholai... I think that was 'பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி...'.

நல்ல நியாபகத்துக்கு வரும் நியூ இயர் பாடல் என்றால் அது மணிரத்தினம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் நிஷாந்தி ஆடிய க்ரூப் டான்ஸில் வரும் கோரஸ் பாடல் 'இரவு நிலவு உலகை அழைக்க நினைத்தது...'. Apart from this, is there any New Year song from other Tamil films that comes to your mind...please let me know. The above songs came under different circumstances in these films, yet they conveyed some message/greetings for new year.


After a very long gap of years, or even for the first time I would say… இளமை இதோ இதோ song made me to think about the relevance of that song to the eve of New Year. However, a close look at the lyrics of Sakalakalavallavan song will reveal that the song has nothing to offer as New Year message, but it is all about Kamal's histrionics only. The film Sakalakalavallavan is no doubt a landmark in the career of Kamal; it came at a time when Kamal was trying to switchover from his 'Kadhal Illavarasan' mode to assume a higher and a more sophisticated 'Sakalakalavallavan' form. The film was undoubtedly a huge commercial success (even eclipsing the much better எங்கேயோ கேட்ட குரல் of Rajni). The film belonged to the time when I happened to witness regular battles fought in my class room between Kamal and Rajni fans – a battle that went for almost a decade. This film released under AVM banner cornered widespread acceptability throughout the state in all three centers, thereby expanding the mass base of Kamal to B and C centers as well (until then, I think Kamal was considered a hero with base in A center only). Though the story or screenplay of Sakalakalavallavan offered nothing new to Tamil cinema, the success of the film made the producers/directors to adopt the same formula for many years. Critics on the other hand point out that this is the movie which played a spoilsport in the genuine movie makers' attempt to present Tamil cinema in an artistic form.

Well, coming to this song, let us see what Kamal demonstrates in this socalled newyear song –
கம்பெடுத்து ஆடுவேன்
கத்திச் சண்டை போடுவேன்
குத்துவதில் சூரன் நான்
குஸ்திகளில் வீரன்நான்



The fiery combatant in Kamal comes out in the above lines, thanks to the lyrics of Vaali. His skills in Gusthi (boxing?) and Silambattam (traditional martial art) and Fencing (அதாங்க... நம்ப எம்ஜியாரும் நம்பியாரும் போடுவாங்களே... கத்திச்சண்டை!) all finds a place. Then he goes on telling about his dancing skill... Kamal also speaks about his popularity among females (காலேஜ் டீனேஜ் பெண்கள் எல்லோர்க்கும் என்மீது கண்கள்) and also swollen with pride that he was successful in Hindi movies too (ஏக் துஜே கேலியே, ஏண்டி நீ பார்த்தியே???) and also does some acrobats (குட்டிக்கரணம், then lifts two ladies in each of his hands)... and Kamal entertains ridding a motor bike, then smashes a glass window, does some Roller skating… all he had reportedly done by himself without the support of any dupe artiste – oh, a real sakalakalavallavan indeed! Kamal also doesn’t not fail to throw some light on his film career; he hints about his versatility in taking up different kind of roles (eg: Kalyanaraman) and reminds the audience that he is in the scene since a long time (from the days of his childhood in Kalathoor Kannamma).

The following lyrics needs no explanation..
''வாலிபத்தில் மன்மதன்
லீலைகளீல் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது கூறுங்கள்
(here is where I have to admit that Kamal was matchless in his heydays; at that time, there was no Prabu Deva, Raju sundaram, Lawrence… even though Anand Babu made his debut couple of years later, Babu was still unable to match Kamal in style and grace)
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்'
'
next stanza goes like this -
இந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக்துஜே கேலியே.. லலா லலா
ஏண்டி நீ பார்த்தியே லலா லலா


எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாழும் மாமந்தான்
கல்யாணராமன் தான்
நாள்தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்
''

However, as far as the lyrics of the next stanza are concerned, I would rather dismiss it as something more clichéd exaggeration which no hero of Kollywood, Tollywood or Bollywood is found inculpable in my judgment.



''என்னை யாரும் ஏய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
என்னை வெல்ல யாரும் கிடையாது
எதிர்க்கின்ற ஆளேது
யார் காதிலும் பூச்சுற்றுவேன்
நாந்தான் சகலகலா வல்லவன்''



என்ற பாடல் வரிகள் வரும்போது, ஏ.வி.எம்.புஷ்பலதா (படத்தில் அம்பிகாவின் அம்மா) போல வாயைப் பிளந்துகொண்டு ஒருவித பிரம்மிப்போடு டிவி முன்பாக உட்கார்ந்து கொண்டு என் பால்ய காலங்களில் பார்த்தவந்தான் நானும்.


and back again to the Pallavi…

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள்
எல்லோர்க்கும் என் மீது கண்கள்




And so, the song is all about Kamal Hassan and nothing about New Year baring that first line – 'hi everybody wish you happy newyear', which infact, is not a part of the song at all, but only the prelude of the song – 'so what?' you may ask me. Whenever this song is projected as a New Year song, no doubt it will be a virtual treat for all his fans; but for the rest of us..? Anyhow, if this song takes you to your joyful youthful days, that is the best thing that this song has done, and if it really does take you to your golden olden days of your adolescent years, then that is the best thing that I have done by writing this piece.

Have a beautiful year ahead!

Cheers!

Labels: